Skip to main content

“நான் தான் புதிய எஸ்.ஐ!” வசூல் வேட்டை நடத்திய விமான நிலைய செக்யூரிட்டி!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

Airport security who lied as as sub inspector of the area was arrest


குமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்துக்குட்பட்ட குழித்துறைப் பகுதி எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். கேரளா, தமிழகம் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடியில், அந்தப் பகுதி சிக்கி மூச்சு விடுவதற்கே திணறிக் கொண்டிருக்கும். 


இந்த இடத்தில் போலீஸ் சீருடையில் வாலிபர் ஒருவா் திடீரென்று போக்குவரத்தைச் சரி செய்து கொண்டிருந்தார். மேலும் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடமிருந்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தார். அந்த வாலிபா் மீது அங்கு இருந்த வியாபாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, வியாபாரிகள் அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, “நான் தான் களியக்காவிளைக்கு வந்திருக்கும் புதிய எஸ்.ஐ” எனக் கூறியிருக்கிறார்.


இதனை நம்ப முடியாத அந்த வியாபாரிகள் களியக்காவிளை போலீசிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த உளவுப் பிரிவு போலீசாரிடமும் மாஸ்க், ஹெல்மெட் கேட்டு அவர்களுக்கும் அபராதம் விதித்து, ரூ.2,000 கேடடுள்ளார். இதனையடுத்து, நேரடியாக வந்த களியக்காவிளை போலீசார், அவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் மூலம் செக்யூரிட்டியாக வேலை பார்த்துவருகிறார் என்பது தெரியவந்தது. இவர், நித்திரைவிளை வன்னியூா் பகுதியைச் சேர்ந்த பிபின் (25) என்பதும் தெரியவந்தது. 

 

இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த நபர் வாகன ஓட்டிகளிடமிருந்து வசூல் செய்த ரூ.8 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.