Skip to main content

'கட்சியின் தலைவராக அண்ணாமலைக்கு அதிமுக மரியாதை அளிக்க வேண்டும்' - வானதி சீனிவாசன்

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

'AIADMK should give respect to Annamalai as party leader' - Vanathi Srinivasan interview

 

'ஒரு கட்சியின் தலைவராக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக மரியாதை அளிக்க வேண்டும்' என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அதில் 'அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. மோடி, நட்டாவுடன் தான் எங்களுடைய பேச்சுவார்த்தை' என்று கூறியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வானதி சீனிவாசன், ''தேசிய ஜனநாயகக் கூட்டணியினுடைய தலைவர்கள் கூட்டம் நடக்கின்ற பொழுது அதிமுகவுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கூட்டணியை எப்படி பலமாக்க வேண்டும். கூட்டணியில் எப்படி அதிமுக இணைந்திருக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறார். இந்த கூட்டணியைப் பாதுகாக்கின்ற பொறுப்பும் எடுத்துச் செல்கின்ற பொறுப்பும் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே செல்லூர் ராஜுவின் கருத்துக்கு இன்னொரு கருத்து சொல்லி கூட்டணிக்குள்ளாக எந்த விதமான குழப்பங்களும் வர வேண்டாம் என்று பார்க்கிறோம்.

 

அதே சமயம் அதிமுக தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கி இருப்பது பாரதிய ஜனதா கட்சி. அந்த கட்சியினுடைய மாநில தலைவர் அவர். எங்கள் கட்சியினுடைய மாநில தலைவருக்கு கிடைக்கக்கூடிய மரியாதை என்பது தனிப்பட்ட நபருக்காக அல்ல எங்கள் கட்சியின் தலைவருக்காக கொடுக்கப்படும் மரியாதை. அதனால் கூட்டணியைப் பாதிக்கின்ற எந்த ஒரு தகவலையும் கருத்துக்களையும் யாரும் பேசாமல் இருப்பது நல்லது என்று கருதுகிறோம். தமிழகத்திலே தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மிகவும் பலமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் புதிதாக நிறைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் வருவதற்காக காத்திருக்கிறார்கள். ஒரு சிலர் விருப்பத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் இந்த மாதிரியான சிறு சிறு விஷயங்கள் இந்த கூட்டணியை ஒருபோதும் பாதிக்கப் போவதில்லை. இது தொடர்பாக நானும் எந்த கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன்.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்தியப் பிரதேச முதல்வராக விஷ்ணு மோகன் யாதவ் தேர்வு!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Vishnu Mohan Yadav chosen as Chief Minister of Madhya Pradesh

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான முந்தைய பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ் ஆவார். தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் மூன்று முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

பாஜக மகளிரணி தலைவியின் கணவர் கத்தியால் குத்தி கொலை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
BJP woman leader husband stabbed to passed away

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி (75). இவர் தனது சொத்துகளை தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதில் இவரது மகன் சாமிக்கண்ணுவுக்கு சொத்தில் சரியான முறையில் பிரித்து தரவில்லை என்று, சாமிக்கண்ணு மகன் ராஜேஷ் (30) ஞாயிற்றுக்கிழமை தனது தாத்தா ரெங்கசாமியிடம் தகராறு செய்து அரிவாளில் வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கசாமியின் மகன் வேலு இதனை தடுக்க முயன்ற போது அவருக்கும் பலமாக வெட்டு விழுந்துள்ளது. தாத்தா மற்றும் பெரியப்பா ஆகியோரை வெறித்தனமாக வெட்டிச் சாய்த்த ராஜேஷ் அங்கிருந்து சென்றுள்ளார். காயமடைந்த வேலுவின் மனைவி திருப்பதி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவியாக உள்ளார்.

வெட்டுப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்த ரெங்கசாமி மற்றும் வேலு ஆகிய இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வேலு பரிதாபமாக உயிரிழந்தார். பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.