Skip to main content

சேலத்தில் உள்ளாட்சி தேர்தலில் 13 ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிக்குழுவை கைப்பற்றியது அதிமுக!

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் தலைவர் பதவிகளை அதிமுக கூட்டணி வசப்படுத்தி உள்ளது. மாவட்ட ஊராட்சிக்குழுவையும் ஆளுங்கட்சி கூட்டணியே கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜன. 2ம் தேதி எண்ணப்பட்டன. எனினும், ஜன. 3ம் தேதி பிற்பகலில்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றி பெற்றவர்களின் ஒட்டுமொத்த இறுதி நிலவரமும் வெளியிடப்பட்டது.

 

admk

 

ஊராட்சி ஒன்றியங்களில் வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆகிய இரு பதவிகளுக்கும் கட்சிகளின் சின்னங்களின் அடிப்படையில் தேர்தல் நடந்தது. அதனால், இவ்விரு பதவிகளையும் கைப்பற்றுவதில் ஆளும் அதிமுக, திமுக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 288 உறுப்பினர் பதவிகள் உள்ளன. மாவட்ட ஊராட்சிகளில் 29 பதவிகள் இருக்கின்றன.

இவற்றில், பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், நங்கவள்ளி, தாரமங்கலம், மேச்சேரி, ஓமலூர், சங்ககிரி, இடைப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஆகிய 13 ஒன்றியங்களில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.

இதில், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 உறுப்பினர் பதவிகளில் அதிமுக 8, அதன் கூட்டணி கட்சியான பாமக 2 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இந்த ஒன்றியத்தில் திமுகவுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.

வாழப்பாடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுக 8, பாமக 2, தேமுதிக 1 என அதிமுக கூட்டணிக்கு 11 இடங்கள் கிடைத்திருக்கிறது. இந்த ஒன்றியத்தில் திமுகவுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. மற்றொன்றில் சுயேச்சை வெற்றி பெற்றிருக்கிறார். இடைப்பாடி ஒன்றியத்திலும் மொத்தமுள்ள 13 உறுப்பினர் பதவிகளில் திமுக ஒரே ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது. மற்ற 12 இடங்களையும் அதிமுக கூட்டணி வசப்படுத்தி உள்ளது.

திமுக, அதிமுக கட்சிகளிடையே நேரடி மோதல் நிலவிய ஒன்றியங்கள் வரிசையில் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக, அதிமுக கட்சிகள் தலா 6 இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த ஒன்றியத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 19. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திலும் அதிமுகவைக் (4 இடங்கள்) காட்டிலும் திமுக சார்பில் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கெங்கவல்லி ஒன்றியத்தில் அதிமுகவுக்கு சரிக்கு சரியாக திமுக மல்லுக்கட்டி இருக்கிறது. இங்கு மொத்தமுள்ள 11 உறுப்பினர்களில் இரு கட்சிகளும் தலா 5 இடங்களிலும், ஒரே ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இவை தவிர, சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவை இந்த முறை அதிமுக கூட்டணி வசப்படுத்தியிருக்கிறது. மொத்தமுள்ள 29 உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுக தனித்தே 18 இடங்களில் வென்று மெஜாரிட்டி பெற்றுள்ளது. இதன் கூட்டணியில் உள்ள பாமக 4, தேமுதிக 1 என அதிமுக கூட்டணிக்கு மொத்தமாக 23 இடங்களையும், திமுக 6 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.

கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு திமுக வசம் இருந்தது. எட்டு ஆண்டுக்குப் பிறகு நடந்த இந்த தேர்தலில், சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவை அதிமுக வசப்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.