Skip to main content

அதிமுக கவுன்சிலர் கொலை; கொலையாளியை கைது செய்யும் வரை சடலத்தை வாங்காமல் போராட்டம்...!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

aiadmk councilar passes away

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் கோவிலூர் மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

 

இந்த நிலையில், நேற்று (22.02.2021) காலை கவுன்சிலர் ராஜேஷ் வீட்டிலிருந்து ஆலங்காடு செல்லும் வழியில், 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ராஜேஷை கொடூரமாக தாக்கி சாலை ஓர புதருக்குள் தள்ளிவிட்டனர். பின்னர் சரமாரியாக வெட்டி தலையைத் தனியாக எடுத்துக்கொண்டு வந்து, 2 கிமீ தூரத்தில் உள்ள முத்துப்பேட்டை ஆசாத் நகர் கடைவீதியில் நடுரோட்டில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். போலீஸார் தலையையும் உடலையும் கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

 

இந்தச் சம்பவம் காட்டுத்தீயாக பரவியதால், கவுன்சிலர் ராஜேஷின் உறவினர்கள் திரண்டு முத்துப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலையாளிகளைக் கைது செய்யும் வரை சடலத்தைப் பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்க கையெழுத்து போட மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் கேள்விப்பட்டு பல பகுதிகளில் இருந்தும் வந்துள்ளனர். மேலும் கோவிலூர் மதனின் சகோதரர் அமமுக ஜெகன் உட்பட சிலரது பெயர்களை எழுதி புகார் கொடுத்துள்ளனர்.

 

aiadmk councilar passes away

 

இதே போல இன்று காலை வரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதால் காலை முதல் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமமுக பிரமுகர் ஜெகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியதால், கைது செய்துள்ள படத்தைக் காட்டுங்கள் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிமுக கவுன்சிலர் ராஜேஷ் படுகொலையைக் கண்டித்து பல மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.