Skip to main content

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாரடைப்பால் மரணம்!

Published on 04/04/2021 | Edited on 04/04/2021

 

after election campaign admk leader back to home down incident


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி. அ.தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த ஐந்து வருடங்களாக பொன்னமராவதி ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

 

தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைரமுத்து போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் உள்ள பெரும்பான்மையான அ.தி.மு.க. வாக்காளர்கள் வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கே கே.செல்வகுமாருக்கு ஆதரவாக இருப்பதால், அதே சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் பழனியாண்டி மூலம் முத்தரையர் வாக்குகளை பெற அவரை வேட்பாளர் வைரமுத்து தேர்தல் பணிகளில் முழுமையாகப் பயன்படுத்தி வந்தார்.

after election campaign admk leader back to home down incident

 

இந்நிலையில் நேற்று (03/04/2021) இரவு 10.00 மணி வரை அ.தி.மு.க. வேட்பாளருக்காக வாக்குச் சேகரித்த பழனியாண்டி இரவு 11.00 மணிக்கு வீட்டிற்கு வந்து உறங்கினார். இரவு 12.00 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு அருகிலேயே இருந்த அவரது அண்ணன் மகனான டாக்டர், பழனியாண்டியைப் பரிசோதித்தார். அதைத் தொடர்ந்து, அவர் பொன்னமராவதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

 

அ.தி.மு.க.வுக்காக கடுமையாகத் தேர்தல் பணிச் செய்த ஒன்றியச் செயலாளர் மாரடைப்பால் மரணமடைந்த தகவல் அறிந்த வேட்பாளர்கள் திருமயம் வைரமுத்து, புதுக்கோட்டை கார்த்திக் தொண்டைமான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலரும் நேரில் வந்து அவரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க.வின் ஒரு பலத்தை இழந்துவிட்டதாக கூறுகின்றனர் கட்சியினர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.