Skip to main content

அ.தி.மு.க எம்.பி விஜயகுமார் வீட்டுமுன் கிடந்த வெடிகுண்டால் பரபரப்பு...!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

ADMK MP vijayakumar home kanyakumari


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்த குமரி மாவட்டம், நாகர்கோவில் வெள்ளாளர் நகர், மேற்குக் காலணியைச் சேர்ந்த விஜயகுமாரை 2004 -ல் மேல்சபை எம்.பி ஆக்கி, அதன்பிறகு, 6 மாதத்தில் ஒருங்கிணைந்த குமரி மாவட்டச் செயலாளராகவும் ஆக்கினார்.

இது ஏற்கனவே குமரி மாவட்டத்தில், கோலோச்சி கொண்டிருந்த தளவாய் சுந்தரம், பச்சைமால் மற்றும் நாஞ்சில் முருகேசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க.வின் முக்கியப் பதவியைக் கைவசம் வைத்திருந்தவர் விஜயகுமார். இவர், தளவாய் சுந்தரம், பச்சைமால் மற்றும் நாஞ்சில் முருகேசனை ஓரங்கட்டி தனக்கென்று ஒரு அணியை அ.தி.மு.க.வில் உருவாக்கினார். இதனால் குமரி மாவட்டத்தில் 4 அணிகளாக அ.தி.மு.க செயல்பட்டது.

இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தளவாய் சுந்தரம் சசிகலாவின் ஆதரவாளராக மாறிய பின்னர், சில மாதங்களுக்குப் பிறகு, டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியைத் தக்கவைப்பதற்காக, எடப்பாடி அணிக்கு மாறினார். இதையடுத்து, குமரி மாவட்டத்தில் தளவாய் சுந்தரத்தின் கை ஓங்கவே, விஜயகுமாரிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கபட்டது. குமரி கிழக்கு, மேற்காகப் பிரிக்கப்பட்ட பின்னர், தளவாய் சுந்தரம் சுட்டிக்காட்டிய ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணியைச் சோ்ந்த இருவரை, மாவட்டச் செயலாளராக ஆக்கினார்கள். இதனால், விஜயகுமார் அப்செட் ஆகி, அவருடைய ஆதரவாளர்களும் ஓரங்கட்டப்பட்டனர்.

இதனால் விஜயகுமார், மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். மேலும், நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆா் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், விஜயகுமாரை மேடையில் ஏற்றவிடாமல் தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி கோஷம் போட்டனர். இந்த நிலையில், கடந்த 10 -ஆம் தேதி கரோனா தடுப்பு ஆய்வுப் பணிக்காக, நாகர்கோவில் வந்த எடப்பாடி பழனிசாமியை விஜயகுமார் வந்து சந்திக்கவும் இல்லை, அந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவும் இல்லை. இது அ.தி.மு.க.வினரிடத்தில் பரபரப்பாகவும் பேசப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை விஜயகுமார் எம்.பி.யின் வீட்டுமுன் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி விட்டுச் சென்றதாக நேசமணி நகர் போலீசுக்கு விஜயகுமாரின் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். அப்போது, விஜயகுமார் வீட்டில் இல்லை. இதையடுத்து அங்கு வந்த போலீசாரும் வெடிகுண்டு நிபுணா்களும், கியூ பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு வீசியதால் எந்த விதச் சேதமும் ஏற்படவில்லை. 
 

cnc


வெடிக்காமல் கிடந்த அந்த வெடிகுண்டை நிபுணர்கள் சோதனை செய்ததில், பிளாஸ்டிக்கால் ஆன உருண்டை வடிவிலான  ஐஸ் கிரீம் டப்பாவில் வெடி மருந்தை நிரப்பி அதை யாரோ எறிந்துவிட்டுச் சென்றதாக, போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். மேலும், இது குறித்து போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம், விஜயகுமாரின் உறவினா்களிடத்தில் அதிர்ச்சியை உருவாக்கியிருப்பதோடு அ.தி.மு.க.வினரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.