Skip to main content

எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடங்களில் ரெய்டு; என்னென்ன சிக்கின..? வெளியான புதிய தகவல்

Published on 22/07/2021 | Edited on 27/07/2021

 

admk leader mr vijayabaskar office and home raid money seizures

 

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இன்று (22/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக அரசு போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளது சம்பந்தமாக அவர்கள்மீது கடந்த 21/07/2021- ஆம் தேதி அன்று கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற எண்.5/AC/2021 பிரிவு 13(2) r/w 13(1)(b) of the PC (Amendment) Act, 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC (Amendment) Act, 2018- ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

 

மேற்படி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று 22.07.2021- ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பணம் ரூபாய் 25,56,000/- மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
enforcement department raided the house of former Viralimalai Vijayabaskar MLA

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் மீதான குட்கா வழக்கும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

ர.ர.க்களோ, பாஜக கூட்டணிக்கு அதிமுக போகவில்லை என்பதால் எங்களை பயம் காட்ட இதுபோன்ற சோதனைகளை பாஜக அரசு செய்து வருகிறது. இது பாஜகவின் இயலாமையை காட்டுகிறது என்கின்றனர்.

Next Story

பிரபல கொரியர் நிறுவனத்தில் இ.டி ரெய்டு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
ET Raid on Famous Courier Company

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பில் போட்டியிடும் ராமநாதபுரம் எம்.பி வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எஸ்டி கொரியர் அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  நவாஸ் கனி தற்போது ராமநாதபுரம் எம்பியாக இருக்கும் நிலையில், அவருக்கு மீண்டும் போட்டியிட கூட்டணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தச் சோதனையானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாகவே சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலத்தில் பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அலுவலகத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வெளியேற்றிவிட்டு முக்கிய நிர்வாகிகளை மட்டும் உள்ளே வைத்து இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எஸ்டி கொரியர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளை அலுவலகங்களை வைத்துள்ளது. வரிஏய்ப்பு நடந்ததாக வருமானத்துறை சோதனை நடத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடப்பது பரபரப்பை கொடுத்திருக்கிறது.