Skip to main content

மக்களை வஞ்சிக்கும் ஆதார் மையம்... – கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

adhar center issue in tirupattur district


அரசின் தேவைகளுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், மத்திய – மாநில அரசுகள் ஆதாரைக் கட்டாயமாக்கியே வைத்துள்ளன.

 

அரசு மற்றும் தனியார் துறையில் எது ஒன்றுக்கும் ஆதார் எண் வேண்டும் எனக் கேட்கும் நிலையே உள்ளது. தொடக்கத்தில் ஆதார் தகவல்களை தப்பும் தவறுமாகப் பதிவு செய்துவிட்டார்கள் அதன் பணியாளர்கள். இப்போது ஆதாரில் இருப்பது போல் பெயர் இருக்க வேண்டும், முகவரி இருக்க வேண்டும் எனக் கேட்கிறார்கள் அதிகாரிகள்.
 

தவறானதை திருத்த, புதிய தகவல்களைச் சேர்க்க ஆதார் மையம், அஞ்சலகம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் எனச் சில இடங்களில் அமைக்கப்பட்டாலும், கரோனா பிரச்சனையால் இந்த இடங்கள் சரிவர இயங்குவதில்லை. இதனால், அரசின் வளாகத்தில் செயல்படும் இந்த மையத்துக்கு வருகை தருகிறார்கள்.
 

திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்படுகிறது. இந்த மையத்துக்கு ஆதார் தகவல்களை திருத்தவும், புதிய கார்டு பெறவும் தினமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் திருப்பத்தூரை சுற்றியுள்ள 50க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து வருகை தருகிறார்கள்.
 

காலை 9 மணிக்கு திறக்க வேண்டிய ஆதார் மையம், 10 மணிக்கு மேலே திறக்கப்படுகிறதாம். அதோடு, அங்கு பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் பொதுமக்களிடம் ஒருமையில் பேசுவதும், 50 ரூபாய் கட்டணத்துக்குப் பதில் 60 ரூபாய், 70 ரூபாய் பெறுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

கிராமத்தில் இருந்து வருபவர்களுக்கு டோக்கன் தந்து உட்காரவைக்கப்படுகிறார்கள். காலை சாப்பாடு, மதியம் உணவு போன்றவற்றை பல ஏழை மக்கள் ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். சிலர் கையில் காசுமில்லாமல் பட்டினியில் நாள் முழுவதும் அமர்ந்து, வந்த வேலையை முடித்துக்கொண்டு செல்கிறார்கள். விபரம் தெரியாத மக்கள் என்பதால் தேவையான ஆவணங்களைக் கொண்டு வரமுடியாமல் மறுநாள் வந்து காத்திருந்து வேலையை முடித்துக்கொண்டு செல்கின்றனர் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
 

மாவட்டத்தில் ஆதார் மையங்களை அதிகப்படுத்தி பொதுமக்களின் அலைச்சலையும், நேரத்தையும் குறைத்து வேகமாக வேலையை முடிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.