Published on 13/10/2023 | Edited on 13/10/2023
![Additional judges appointed to Madras High Court!](http://image.nakkheeran.in/cdn/farfuture/s_0q_JqsnPW8Lnn6QhUI4TfqVRQyQK958G6Wn5rOLR0/1697212526/sites/default/files/inline-images/add-judge-hc.jpg)
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட இருவரும் 2 ஆண்டுகள் பணியாற்றுவார்கள். கூடுதலாக 2 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.