Skip to main content

எல்லா துறையிலும் பாலியல் தொந்தரவு உண்டு! நடிகை ஜனனி அய்யர் பளீச்!!

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
actress janani iyer


சினிமா துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உண்டு என்று நடிகை ஜனனி அய்யர் சேலத்தில் கூறினார்.


சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 28, 2018) நடந்தது. நடிகர் பாலாஜி, நடிகை ஜனனி அய்யர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஜனனி அய்யர் செய்தியாளர்களிடம் கூறியது:
 

பாலியல் தொந்தரவு விவகாரம் 'மீடூ' இயக்கம் மூலமாக வெளியே பேசப்பட்டு வருகிறது. இது ஓர் ஆரோக்கியமான விஷயம். இதை, ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு செய்தியாகக் கருதாமல் நல்ல விதமாக பார்க்க வேண்டும். பெண்கள் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
 

சினிமா துறை மட்டுமின்றி, ஐடி உள்பட பல்வேறு துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் உள்ளன. சினிமாத்துறை என்பதால் இந்த விவகாரம் பெரியளவில் பேசப்படுகிறது.
 

பாதிக்கப்படும் பெண்கள், 6 மாதம், ஒரு வருடம் என காலதாமதம் செய்யாமல் உடனடியாக அதைப்பற்றி வெளியே கூற வேண்டும். அவ்வாறு தெரிவித்தால், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் ஏற்படும். அதேசமயம், இந்த 'மீடூ' வாய்ப்பை பெண்கள் தவறாகவும் பயன்படுத்தி விடக்கூடாது. 
 

இவ்வாறு ஜனனி அய்யர் கூறினார்.
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இயக்குநரை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன்” - ஜனனி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
janani speech at hotspot success meet

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி, சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில் ஜனனி பேசியதாவது, “ஒரு படம் பெரிய படமா?, சின்னப் படமா? என பாரபட்சம் காட்டாமல், படம் நன்றாக இருந்தால் பாராட்டி, அதை ஜெயிக்க வைக்க உங்கள் ஆதரவைத் தருகிறீர்கள், உங்களுக்கு நன்றி. இயக்குநர் விக்னேஷுக்கு நன்றி. கதை கேட்டதிலிருந்து ஷூட்டிங் வரை, அவரை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன் ஆனால் பொறுமையாக இருந்து, என்னை நம்புங்கள் என ஆதரவு தந்து, இந்தப்படத்தை எடுத்தார். இந்தப்படத்தில் எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். இந்தப்படத்தை நல்லமுறையில் எடுத்துச் சென்ற தயாரிப்பாளர்களுக்கு நன்றி” என்றார். 

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது, “இந்தப்படம் இந்த நிலையில் இருக்க மிக முக்கிய காரணம் நீங்கள் தான். பிரஸ் மீட்டில் அவ்வளவு நெகட்டிவிட்டி பரவிய பிறகு, பிரஸ் ஷோவின் போது, மிகப்பதட்டமாக இருந்தேன். ஆனால் நீங்கள் கைதட்டிப் பாராட்டியது உண்மையிலேயே மிக சந்தோசமாக இருந்தது. நல்ல படம் என்றால் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்பது இதன் மூலம் நிரூபணமானது. இன்னொரு வேண்டுகோள், திரையரங்கில் இப்போது படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் வீக் டேஸில் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆனால் தான், அடுத்த வாரம் ஷோ தருகிறார்கள். ஆனால் வார நாட்களில் பெரிய ஹீரோக்களுக்கே கூட்டம் வராது. இந்த நிலை மாற வேண்டும். நீங்கள் ஆதரவு தந்தால் அடுத்த வாரமும் படம் ஓடும். எல்லோருக்கும் நன்றி. அடுத்த வருடம் ஹாட் ஸ்பாட் 2 வோடு, எங்கள் குழுவோடு உங்களைச் சந்திக்கிறோம் நன்றி” என்றார். படக்குழுவினர் இதே தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஹாட்ஸ்பாட் 2 உருவாகவுள்ளதை இந்த வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Next Story

'அந்த மர்ம மனிதன் யாருன்னு கண்டுபுடிக்கமுடியல' - வைரலாகும் விஜய் சேதுபதி வெளியிட்ட ட்ரைலர்

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

'Who Can't Find That Mysterious Man' - Viral Vijay Sethupathi's Trailer

 

தமிழில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் அசோக் செல்வனும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஹாஸ்டல்'. ஆர்.ரவீந்திரன் தயாரித்திருந்த இப்படத்தில் பிரியா பவானிசங்கர், சதீஷ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காமெடி கலந்த திகில் ஜானரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை அடுத்து 'கே 4 க்ரியேஷன்' சார்பாக கேசவன் தயாரிக்கும் 'வேழம்' படத்தில் நடித்துள்ளார். ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜானு சந்தர் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் 'வேழம்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். கொடூரமாக ஒரு கொலை நடக்கிறது, அந்த கொலையாளி யார்? அவனை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை த்ரில்லிங்காக சொல்வது போல் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் இந்த ட்ரைலர் வைரலாகி வருகிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.