Skip to main content

'மனப்பூர்வமாக அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை'-ராகவா லாரன்ஸ் உருக்கம்    

Published on 13/09/2020 | Edited on 13/09/2020
 Raghava Lawrence

 

நடிகர் ரஜினிகாந்த் தான் முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டுமென நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சமூகவலைதளத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவருக்கு பதிலளித்துள்ள ராகவா லாரன்ஸ், லீலா பேலஸில், அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் அறிவித்த பொழுது ஒரு ரசிகனாக மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அதே நேரம் தான் முதலமைச்சராக இருக்க போவதில்லை என அவர் கூறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் ரசிகன் என்ற முறையில் அவரது வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அவருடைய முடிவிற்கு சம்மதம் தெரிவித்தேன். ஆனால் மனப்பூர்வமாக அவர் சொன்ன அந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்த் தான் முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும். ''நீங்க வந்தா நாங்க வர்றோம்; இப்போ இல்லன்னா வேற எப்போ'' என்ற ஹேஷ் டாக்கை பயன்படுத்தி உருக்கமாக இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலில் சேவையாற்ற தயாராக இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Sarathkumar merged the party into the BJP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

திமுக, கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, பாமக திடீரென பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள தமாகா, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அதேநேரம் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் நடிகர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

பாஜக-சமத்துவ மக்கள் கட்சி இடையே விரைவில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக தெரிவித்துள்ள சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது கட்சியின் முடிவல்ல என்றும் இது மக்கள் பணிக்கான தொடக்கம் என விளக்கம் அளித்துள்ளார்.