Skip to main content

போலீஸாருக்கு உதவிய நடிகர் மெட்ரோ சிரிஷ்!

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

 

    

கரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதில் காவல்துறையினரின் பணிகள் மெச்சத் தகுந்தவைகளாக இருக்கின்றன. எவ்வளவு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் வீதிக்கு வரும் மக்களிடம் கெஞ்ச வேண்டிய இடத்தில் கெஞ்சியும் லத்தியை சுழற்ற வேண்டிய தருணத்தில் சுழற்றியும் வேகம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குரிய பாதுகாப்பு கவசங்கள், ஊட்டச் சத்து பாணங்கள் பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது. 
 

இந்த சூழலில், காவல்துறையினரின் பணிகள் மீது கொண்டுள்ள அக்கறையில் அவர்களுக்கான முக கவசங்கள், குளுகோஸ், சானிடைஷர் உள்ளிட்ட பொருட்களை அவர்களுக்கு கொடுத்து உதவியுள்ளார் ’ மெட்ரோ ‘ திரைப்பட ஹீரோ மெட்ரோ சிரிஷ்! 

 

Actor Metro Sirish helped police


              

இதுகுறித்து அவரிடம் நாம் பேசியபோது, ‘’கரோனா கொடூரன் கண்களுக்குத் தெரிவதில்லை. கண்களுக்குத் தெரியாத அந்த வைரஸ் தொற்று மக்களிடம் பரவாமல் தடுத்து நம்மை பாதுக்காக்க 24 மணிநேரமும் கண் துஞ்சாமல் உழைக்கின்றனர் போலீஸார். அவர்களின் பணிகள் சாதாரணமானதல்ல! அவர்கள் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் சொல்லிட முடியாது. 

 

அப்படிப்பட்ட காவல்துறையினருக்கு உதவும் வகையில் மருத்துவ பொருட்களையும், ஊட்டச் சத்து பொருட்களையும், கிருமிகளை கொல்லும் சானிடைஷர்களையும் கொடுக்க வேண்டும் என நினைத்தே இதனை செய்திருக்கிறேன். மிகவும் நெருக்கடியில் சூழலில் நாடு இருக்கிறது. நம்மையும் நாட்டையும் பாதுகாக்க காவல்துறையினர், மருத்துவர்கள், துப்புறவு தொழிலாளர்கள் என பலரும் அவரவர்கள் தரப்பில் போராடி வருகின்றனர். நம்மை பாதுக்காக்க உழைக்கும் அவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இதனை செய்திருக்கிறேன் ‘’ என்கிறார் நடிகர் மெட்ரோ சிரிஷ்.
 




 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.