Skip to main content

கம்போடியாவில் வங்கி கணக்கு வைத்திருந்த திருச்சி அறக்கட்டளை நிர்வாகி வீட்டில் அதிரடி ரெய்டு!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

வெளிநாட்டு நிதி உதவியுடன் இந்தியாவின் அறக்கட்டளைகள் பல நடந்து வந்தது. இதில் கிறிஸ்தவ நிறுவனங்கள் நிறைய இருந்து வந்தது. ஆனால் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் கிறிஸ்தவ நிறுவனங்களின் வெளிநாட்டு நிதிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வந்தது மத்திய அரசு.

அதே போன்று வெளிநாட்டு நிதி வாங்குவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு தற்போது கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது என்பதால் தற்போது அறக்கட்டளைகள் இந்த அனுமதிக்காக காத்து கிடக்கிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் உள்ள ஒரு அறக்கட்டளை கம்போடியாவில் வங்கி கணக்கு ஆரம்பித்து அங்கிருந்து பணத்தை இங்கே கொண்டு வருவதற்காக முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று போலீஸ் துணையோடு அதிரடி சோதனை நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Action Ride at Trichy Trust Administrator's Home - Bank Account in Cambodia


திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வசித்து வருபவர் ஜெகநாதன்(வயது 62). எலக்ட்ரீசியனான இவர், கடந்த 9 ஆண்டுகளாக அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெகநாதன் வீட்டிற்கு நேற்று காலை 6 மணியளவில் திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 8-க்கும் மேற்பட்டோர் 3 கார்களில் வந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 ஜெகநாதன் வீட்டிற்குள் சென்ற வருமான வரி அதிகாரிகள் அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும், ஜெகநாதன், அவரது மகள் சுகன்யா, மருமகன் பிரபு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம், அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு உள்ளதா?, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பணபரிவர்த்தனை குறித்து கேட்டறிந்தனர்.

Action Ride at Trichy Trust Administrator's Home - Bank Account in Cambodia

 

விசாரணையில், ஏழை - எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக கம்போடியா நாட்டில் உள்ள வங்கியில் கணக்கு உள்ளதும், அந்த வங்கி மூலம் காசோலைகள் பெற்று வந்ததும் தெரிய வந்தது. இதற்காக அவர் 4 முறைக்கு மேல் கம்போடியா சென்று வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, கம்போடியா நாட்டில் தொடங்கப்பட்டுள்ள வங்கி புத்தகம், காசோலைகள் மற்றும் சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

இந்த சோதனை 9 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சோதனையை முடித்து விட்டு வெளியே வந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் பதில் அளிக்காமல் காரில் ஏறி சென்று விட்டனர். அறக்கட்டளை நிறுவனர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Action Ride at Trichy Trust Administrator's Home - Bank Account in Cambodia


வருமான வரி அதிகாரிகள் காலை 6 மணிக்கு ஜெகநாதன் வீட்டிற்கு சென்று சோதனை செய்ய வேண்டும் என்று கூறியபோது அவர்களை ஜெகநாதன் நம்ப மறுத்தார். இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்த பிறகே சோதனை மேற்கொள்ள அனுமதித்தார்.. ஜெகநாதன் வயது முதிர்ந்த நிலையில் எப்படி இப்படி வெளிநாட்டு தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பது பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

ஜெகநாதனுக்கு உதவியாக அவருடைய மகளும் மருமகனும் உள்ளது குறிப்பிட்டது. அவர்களை குறித்த விவரங்களை சேகரித்து வருகிறன்றனர் வருமானவரித்துறையினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.