Skip to main content

எந்த கையெழுத்தும் அத்துப்படி... இன்ஸ்பெக்டர் கையெழுத்து எம்மாத்திரம்..? கைதான வழக்கறிஞர்கள்..!!!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

எந்த அரசு அதிகாரியின் கையெழுத்துக் கேட்டாலும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் கையெழுத்தை அச்சு அசலாக போட்டு சான்றிதழ் வழங்கிய வழக்கறிஞர்கள் இருவரை கைது செய்துள்ளது சிவகங்கை மாவட்டக் காவல்துறை.

 

According to any signature ... Inspector's signature is just that ..? Arrested Lawyers .. !!!

 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல்துறை சரகம் கல்லூரணியை சேந்தவர் சசிவர்ணம் மகன் கலையரசன். இவர்  ரூ.75 ஆயிரம் பெற்றுக் கொண்டு தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்திற்கான பத்திரத்தை கரூர் கிராமத்தினை சேர்ந்த பழனிச்சாமி மகன் பெரியசாமியிடம் அடகு வைத்துள்ளார். ஆரம்பக்காலக்கட்டத்தில் வட்டியினை மட்டும் செலுத்தி வந்த இவர், மொத்த அசலையும் செலுத்தி தனது நிலப்பத்திரத்தினை திரும்பக் கேட்டிருக்கின்றார். நிலத்துப் பத்திரத்தை தொலைத்த பெரியசாமியோ ஆரம்பத்தில் கலையரசனை அலைக்கழித்துவிட்டு, விவகாரம் விபரீதமாவதை தொடர்ந்து குறிப்பிட்டக் கால அவகாசம் கேட்டுள்ளார். இவ்வேளையில், இளையான்குடி பகுதியில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் பாலையா மற்றும் பாண்டியனை அணுகியுள்ளார் பெரியசாமி. குறிப்பிட்ட இரு வழக்கறிஞர்களும் கலையரசனை சந்தித்து, " நீங்கள் பத்திரம் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து, அதன்பின் இன்ஸ்பெக்டர் தரும் சான்றிதழைக் கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தினை அனுகினால் உங்களுக்கு நகல் பத்திரம் கிடைக்கும். அதற்கு நாங்கள் பொறுப்பு. செலவுகளை பெரியசாமி ஏற்றுக்கொள்வதாக ஏற்றுக்கொண்டார்." என சமாதானம் பேசி நம்பிக்கையளிக்க அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

 

According to any signature ... Inspector's signature is just that ..? Arrested Lawyers .. !!!

 

வழக்கறிஞர்கள் கூறியது போலவே இன்ஸ்பெக்டர் ( ரப்பர் ஸ்டாம்ப் ) முத்திரையுடன் கூடிய கையெழுத்து சான்றிதழைக் கொடுத்துள்ளனர். அதனைக் கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க ,கையெழுத்திட்டது இன்ஸ்பெக்டர் ஜெயராணி அல்ல.. அது போலி கையெழுத்து என குட்டு வெளிப்பட்டது.  பத்திரவுப் பதிவு அலுவலகத்தினர் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாலையா மற்றும் பாண்டியன் ஆகிய இரு வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

விசாரணையில், " வழக்கறிஞர்களாக இருந்து கொண்டு அனைத்து விதமான டாக்குமெண்டுகளை தயார் செய்ததும், பல உயரதிகாரிகளின் கையெழுத்து போலியாக கையெழுத்திட்டு வருமானம் ஈட்டி வந்ததும் தெரியவர, சமீபத்தில் இளையான்குடி பகுதியில் வழங்கப்பட்ட அனைத்து தடையில்லா சான்றிதழ்களின் உண்மைத்தன்மையையும் சோதித்து வருகின்றனர் நில அபகரிப்பு பிரிவு மற்றும் இளையான்குடி காவல் நிலைய பொறுப்பாளருமான இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையிலான இளையான்குடி போலீசார். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.