Skip to main content

ஆம்பூர் சாலையில் விபத்து... ஒருவர் பலி, ஐவர் படுகாயம்...

Published on 15/01/2021 | Edited on 15/01/2021

 

accident in chennai bengaluru highway

 

சென்னை டூ பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக பயணத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகவுள்ளது. இதுபற்றி சில முறை விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டாலும் அதனை வாகன ஓட்டிகள் பெரிதும் கண்டுகொள்வதில்லை.

 

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த கார் ஆம்பூர் கடந்து சின்னகொம்மேஸ்வரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் டயர் வெடித்து எதிரில் வந்த மினி வேன் மோதி விபத்துக்குள்ளானது.

 

இதில் காரில் பயணம் செய்த பெண் ஒருவர் உயிரிழந்தார், காரில் பயணம் செய்த மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளால் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தந்து மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து ஆம்பூர் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்