Skip to main content

வீட்டில் ஸ்கேன் செய்து கருக்கலைப்பு; தர்மபுரியில் சிக்கிய கும்பல்

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

 Abortion by scan at home; A gang trapped in Dharmapuri

 

தர்மபுரியில் சட்டவிரோதமாக வீட்டில் ஸ்கேன் இயந்திரங்களை வைத்து கருவில் உள்ளது ஆணா பெண்ணா எனத் தெரிவித்து வந்த கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சட்டவிரோதக் கருக்கலைப்பு நடைபெற்றது தொடர்பான தகவல்களை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பெண் குழந்தைகளை அதிகளவில் கருக்கலைப்பு செய்யப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தர்மபுரி மொரப்பூர் பகுதியில் ஆண், பெண் விகிதாச்சார பிறப்பு என்பது குறைவாக இருந்ததையடுத்து தர்மபுரி மருத்துவத் துறையின் இயக்குநர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் ஸ்கேன் செய்து கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா எனச் சொல்வது மற்றும் கருக்கலைப்பு செயல்களில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

 

 Abortion by scan at home; A gang trapped in Dharmapuri

 

ராக்கம்மாள் என்ற பெண் வீட்டில் இது இயங்கி வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி பகுதியில் தனியார் மருத்துவமனையில் ராக்கம்மாள் பணியாளராக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இவருக்கும் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கருக்கலைப்பு செய்பவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாகவே வீட்டில் இயந்திரங்களை வைத்துக்கொண்டு கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 

நேற்று தர்மபுரி மருத்துவத் துறையின் இயக்குநர் சாந்தி நேரடியாக இந்த கும்பலை கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார். இதில் கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா எனக் கண்டறிந்து சொல்வதற்கும், கருக்கலைப்பு செய்வதற்கும் இந்த கும்பல் 30 ஆயிரம் வரை பணம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.