Skip to main content

ஆதாரைக் காட்டு... அஞ்சலி செலுத்து... துப்பாக்கிச்சூடு 2- ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020


 

AADHAR CARD THOOTHUKUDI STERLITE PEOPLES INCIDENT SECOND TEAR


இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாள்! 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலம், நீர், காற்று ஆகியவனற்றில் மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுங்கள் என குடிநீர், பால், உணவு எடுத்துக்கொண்டு குழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள் என குடும்பத்துடன் திருவிழாவிற்கு செல்வது போல் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றார்கள் தூத்துக்குடி மாவட்ட மக்கள்.
 


நடந்தது என்னவோ.?! வாயில் சுடப்பட்டும், தலையில், நெஞ்சில் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் 12 நபர்கள், காவல்துறையினரால் அடித்து உதைக்கப்ப்ட்டு இறந்தவர்கள் 3 நபர்கள், செய்துங்கநல்லூரில் பேருந்தில் கொளுத்தப்பட்டவர் ஒருவர் என நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்காகக் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 16 நபர்கள். அவர்களுக்காக இன்று நினைவேந்தலை செலுத்தி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்ட மக்கள். கூட்டம் கூடிவிடக்கூடாது, மீண்டும் ஒற்றுமையாக கை கோர்த்துவிடக் கூடாது என்பதற்காக இன்றும் கடுமையாக நெருக்கடி கொடுத்து வருகின்றது மாவட்ட காவல்துறை. அஞ்சலி செலுத்த வருபவர்களின் ஆதார் எண்ணைக் கேட்பது தான் அடக்குமுறையின் உச்சம் என்கின்றனர் மக்கள்.

 

AADHAR CARD THOOTHUKUDI STERLITE PEOPLES INCIDENT SECOND TEAR


நினைவோடு கலந்த வலிகள், உணர்வோடு கலந்த உயிரிழப்புகள் ஏதும் எளிதில் மறைவதில்லை என்பதற்கேற்ப ஆண்டுகள் இரண்டாகினாலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களும், துப்பாக்கிச் சூடு உயிரிழப்புகளின் சுவடுகளும் இன்னும் தூத்துக்குடியில் ஆறாத ரணமாகவே உள்ளது. பல ஆண்டுகால போராட்டம், பல நூறு தடைகள், பல உயிரிழப்புகள் என எல்லாவற்றையும் தாங்கி நின்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான விவகாரம் தற்போது நீர் விட்டு அணைக்கப்பட்ட தீ கனல்களில் கசியும் புகையைப் போல் கசிந்திட தொடங்கி உள்ளது.


வழக்கு விசாரணைகளை காரணம் காட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மறுத்து வந்த நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் அனுமதி தரவில்லை. 

 

AADHAR CARD THOOTHUKUDI STERLITE PEOPLES INCIDENT SECOND TEAR


ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவான காவல்துறையும் பொது வெளியில் ஒன்று சேரக்கூடாது என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினருக்கு சம்மனை அனுப்பி வைத்து எச்சரிக்க ஆரம்பித்தது. மடத்தூர் பகுதியில் நினைவேந்தல் பேனரை அப்புறப்படுத்தி, பேனர் வைத்தவர் மீதும் வழக்குப் பதிவு செய்தது. எனினும், இதனைப் பொருட்படுத்தாது இன்றைய தினத்தில் தூத்துக்குடி மக்களுக்காக தங்களது இன்னுயிரைக் கொடுத்த ஈகியர்களுக்கு மாநகரிலுள்ள பண்டாரம்பட்டி, மடத்தூர், குமாரரெட்டியாபுரம், தோமையா நகர், இனிகோ நகர், லயன்ஸ் டோன், புதுத்தெரு, சில்வர்புரம் உள்ளிட்ட இடங்களிலும் மறைந்த ஈகியரை நினைவு கூறும் விதமாக, முகத்தில் கறுப்பு வண்ண முகக்கவசம் அணிந்தும், மெழுகுவர்த்தியும் அஞ்சலியை பெரும்பாலானோர் நினைவஞ்சலி செலுத்த, உயிரிழந்த ஈகியரின் குடும்பத்தார்களோ தங்களது உயிர் உறங்கும் கல்லறையில் அஞ்சலி செலுத்த, குடும்பத்தினர் தவிர கல்லறைக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களை அந்தப் பகுதி சாலையிலேயே தடுத்து நிறுத்தி அவர்களிடம் ஆதார் எண்ணைக் கேட்டு, அதனை வாங்கிய பின்னரே நினைவஞ்சலிக்கு அனுமதிக்கின்றனர். 

எனினும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வரும் மக்கள் இன்று (22/05/2020) மாலை 07.00 மணியளவில் அவரவர் வீட்டின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.