Skip to main content

டாஸ்மாக்கில் காணாமல்போன 83 ஆயிரம் ரூபாய்... அதிமுக மாவட்ட செயலாளர் கையாடல்!!!

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

திருவண்ணாமலை, காமராஜர் சிலை அருகில் டாஸ்மாக் உள்ளது. பல விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட இந்த டாஸ்மாக் கடையில் தினசரி விற்பனை 5 லட்சத்துக்கும் மேல். சரக்கு மீதான கூடுதல் விலை வைத்து விற்பதன் மூலம் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை தனியாக இங்கு பணியாற்றும் சூப்பர்வைஸர் மற்றும் விற்பனையாளர்க்கு கிடைக்கும். அதனால் இங்கு பணியாற்ற பலருக்கும் போட்டா போட்டி.
 

tasmac


இந்த கடையின் சூப்பர்வைஸராக இருப்பவர் அடி அண்ணாமலை சங்கர். இந்த கடையின் வருமானத்தை கேள்விப்பட்ட தானிப்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் (கடை எண் – 9350) பணியாற்றும் ஆளும்கட்சியான அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தின் டாஸ்மாக் பிரிவின் மா.செ. தனபால், எனக்கு காமராஜர் சிலை கடையில் சூப்பர்வைஸர் பணி மாறுதல் வேண்டும் என மாவட்ட அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனை சந்தித்து கடிதம் வாங்கிவந்து மாவட்ட டாஸ்மாக் பிரிவு அதிகாரிகளிடம் தந்துள்ளார். இதனை கேள்விப்பட்ட அந்த கடையில் பணியாற்றும் அடி அண்ணாமலை சங்கர், நானும் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்தவன்தான் என தன் பங்குக்கு அதிமுக பிரமுகர்களை சந்தித்து தன்னை மாற்றக்கூடாது என கோரிக்கைவைக்க அவர்களும் அதிகாரிகளுக்கு பிரஷர் தந்ததால் அதிகாரிகள் முடிவு எடுக்காமல் இருந்தனர்.

பஞ்சாயத்து அமைச்சரிடமே சென்றது அங்கு எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த கடையில் 15 நாள் சங்கரும், அடுத்த 15 நாள் தனபாலும் சூப்பர்வைஸர் பணியை கவனிப்பது என முடிவானது. இதெல்லாம் வாய்மொழி உத்தரவு, அதன்படி நடக்கவும் தொடங்கினார்கள். கடந்த 15ந்தேதி இரவு பணியை முடித்துவிட்டு எந்த பாக்கியுமில்லை, இருப்பு சரியாக உள்ளது எனச்சொல்லி கையெழுத்து வாங்கிக்கொண்டு அடுத்த 15 நாளுக்கான பொறுப்பை தனபாலிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார் சங்கர்.

கடந்த 19ந்தேதி அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு செய்தபோது, 83 ஆயிரம் ரூபாய்க்கான சரக்குமில்லை, பணமும் கல்லாவில் இல்லை, ஆனால் பில் போடப்பட்டிருந்தது. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்யும் விவகாரம் வெளியில் இருந்த தனபாலுக்கு சொல்லப்பட அவர் வந்து தனது பாக்கெட்டில் இருந்து 50 ஆயிரத்தை எடுத்து தந்துள்ளார். விற்பனையாளர்கள் தங்கள் பங்குக்கு 33 ஆயிரத்தை வெளியே புரட்டி கொண்டு வந்து ஒரு மணி நேரத்தில் கட்டியுள்ளனர். ஆளும்கட்சி பிரமுகர்கள் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சென்றுள்ளனர்.

அன்று மாலையே மாதந்திர ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியுள்ளார்கள். அப்போதும் அதே 83 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. அதாவது காலையில் செலுத்திய பணத்தை மீண்டும் அவர்கள் எடுத்துக்கொண்டுள்ளார்கள். இந்த முறை அதிகாரிகள் அதுப்பற்றி குறிப்பு எழுதிவிட்டு சென்றுள்ளனர். நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயன்றபோது, தனபால் அமைச்சரிடம் முறையிட்டுள்ளார். அமைச்சர் தரப்பில் இருந்து, மாவட்ட மேலாளர் புஷ்பலதாவிடம் பேச, நடந்ததை கூறி தணிக்கை டீம் ஆய்வு நடத்தி, அதனை புகாராக பதிவு செய்துவிட்டார்கள். நாங்க ஒன்னும் செய்ய முடியாது எனச்சொல்லியுள்ளார்கள்.

பணம் குறைந்ததால் தனபாலுக்கு மெமோ தந்துள்ளார்கள் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள். அதனை அவர் வாங்காமல் போக்குகாட்டிக்கொண்டு இருப்பவர், என் மீது நடவடிக்கை எடுத்தீங்க, நீங்க யாரும் இங்கே வேலை செய்ய முடியாது என நேரடியாக மிரட்ட அதிகாரிகள் கமுக்கமாகவுள்ளனர்.

அதிமுக தொழிற்சங்கத்தின் டாஸ்மாக் பிரிவின் மா.செ. மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என திமுகவின் தொ.மு.ச. தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு மாவட்ட தலைவர் நளா. ஆறுமுகம் அதிகாரிகளிடம் ரெக்கமண்ட் செய்துள்ளார்.

​ஒரு சாதாரண விற்பனையாளர், சூப்பர்வைஸர் சின்னதா தப்பு செய்தால் சஸ்பென்ட் செய்யும் அதிகாரிகள், கையாடல் நடந்து அதிகாரிகளின் ஆய்வில் இரண்டு முறை அது உறுதியாகியும் நடவடிக்கை எடுக்காமல் திருடனுக்கு துணை போய்க்கொண்டுள்ளார்கள் என்கிறார்கள் டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.