Skip to main content

பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை; அலறி துடித்த தாய்...

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

8 days old baby passes away due to his father worse activity

 

சிதம்பரம் அருகே சக்கங்குடி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் கிழக்கு தெருவில் வசிக்கும் ராஜீவ் - சிவரஞ்சினி தம்பதியினருக்கு கடந்த 11 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் சிவரஞ்சனிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (17.02.2021) இரவு 11 மணிக்கு அவர்களது வீட்டில் குடிபோதையில் இருந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

 

அப்போது குழந்தைக்கு மனைவி சிவரஞ்சனி பால் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது கணவர், “குழந்தையைக் கொடு, நான் பார்த்துக்கொள்கிறேன்” என குழந்தையை வாங்கி மின்விளக்கை அணைத்து, குழந்தையின் கழுத்தை அழுத்தி தரையில் தூக்கி அடித்துள்ளார். திடீர் சத்தத்தைக் கேட்டு உடனே மின்விளக்கை போட்ட மனைவிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. குழந்தையின் மூக்கிலும் வாய்லும் ரத்தம் கசிந்துள்ளது. குழந்தைக்குப் பேச்சு மூச்சில்லாமல் இருந்ததைக் கண்டு தாய் தலையில் அடித்துக்கொண்டு அலறித் துடித்தார். இதனைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடிவந்து குழந்தையை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 

பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். பிறந்து 8 நாளே ஆன குழந்தையை, பெற்ற தந்தையே குடிபோதையில் தரையில் தூக்கி அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட கணவர் ராஜீவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.