Skip to main content

“700 ரூபாய் வாடகை, 7 ஆயிரமானது!” - பொன்முடியிடம் 'பூ' வியாபாரிகள் புகார்!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

"700 rupees rent is 7 thousand" - Florists complain to Ponmudi

 

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்கிற பரப்புரை பயணத்தை, தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளனர். தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி, கொள்கைப் பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி என வரிசையாக மக்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி திருவண்ணாமலை நகரில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, சுற்றுப் பயணத்தை தொடங்கினார். 
 

முதல்கட்டமாக, திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில், திருவண்ணாமலை நகரத்தில் உள்ள 'பூ' வியாபாரிகளின் மார்க்கெட் பகுதிக்கே சென்று கருத்துகளைக் கேட்டறிந்தார். அப்போது, பூ வியாபாரிகள், மாதம் 700 ரூபாய் என இருந்த மாத வாடகையை 7,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது நகராட்சி, போதிய வசதிகள் இல்லை எனக் கூறினர். அதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபங்களில் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகர்களுடன் கலந்துரையாடல், விவசாயிகளுடன் கலந்துரையாடல் எனப் பல்வேறு உள்ளரங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சம்மந்தப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

 

"700 rupees rent is 7 thousand" - Florists complain to Ponmudi


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, “பூ வியாபாரிகளுடன் உரையாடினேன், அவர்கள் தங்களது குறைகளைக் குறிப்பிட்டார்கள். அதேபோல் வர்த்தகர்களுடன் உரையாடினேன், அவர்களும் தங்களது குறைகள், கோரிக்கைகளைக் கூறியுள்ளார்கள். வர்த்தகர்களுக்கான வாரியம் அமைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்கள். அதனைத் தலைவர் ஸ்டாலின், கவனத்துக்குக் கொண்டு சென்று வாரியம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி தந்துள்ளேன்.

 

ஜி.எஸ்.டி வரியில் உள்ள குளறுபடிகளை எடுத்துச் சொன்னார்கள், அதனையும் கவனத்தில் கொள்வோம், பொதுப் பிரச்சனைகளான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குறைகள் சரி செய்ய வேண்டும். பாதாளசாக்கடை திட்டம் பிரச்சனை போன்றவற்றையும் குறிப்பிட்டார்கள். அனைத்தும் சரிசெய்யப்படும்” என்றார்.

 

"700 rupees rent is 7 thousand" - Florists complain to Ponmudi


ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் கட்சித் தொடங்க அனைவருக்கும் உரிமையுள்ளது. அதேபோல் ரஜினிக்கும் உரிமையுள்ளது, அவர் முதலில் கட்சித் தொடங்கட்டும் அதன்பின் அதுபற்றி பேசுவோம் என்றார்.
 

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல், விசாரணை நடத்தக்கூடாது எனக் கருத்துத் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, அவருக்கான கருத்தை அவர் தெரிவித்துள்ளார் என்றார்.


படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.