Skip to main content

நடுக்கடலில் படகு கவிழ்ந்த சம்பவம் - 6 மீனவர்கள் உயிருடன் மீட்பு; 3 மீனவர்களின் சடலங்கள் மீட்பு..!

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த செப்.2 ஆம் தேதி திங்கள்கிழமை புதிய படகு வாங்குவதற்காக கடலூருக்கு சென்றனர்.

அங்கிருந்து போட்டியா எனப்படும் புதிய ரக நாட்டுப்படகை வாங்கிக்கொண்டு,மறுநாள் (செப்.3) செவ்வாய்கிழமை ராமேஸ்வரம் திரும்பி கொண்டிருந்தனர். படகில் நாகசாமி மகன் முனியாண்டி (47), ஆண்டி மகன் ரஞ்சித்குமார் (23), காந்தி மகன் மதன், ஆறுமுகம் மகன் இலங்கேஸ்வரன் (20), காந்தி மகன் தரைக்குடியான், ராமகிருஷ்ணன் மகன் காந்தி குமார் (23), முனியாண்டி மகன் செந்தில்குமார் (31), சண்முகம் மகன் முனீஸ்வரன் (24), ராஜ் மகன் உமாகாந்த் (19), ராஜா மகன் காளிதாஸ் (29) ஆகியோர் இருந்தனர்.

 

6 fishermen alive after boat capsized 3 Fishermen's bodies recovered ..!

 

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கடந்து உச்சிப்புளி அருகே நடுக்கடலில் சென்றபோது  திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படகில் இருந்த 10 மீனவர்களும் கடலுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர்.

அதில் செந்தில்குமார், காளிதாஸ் என்ற இரண்டு மீனவர்களும் பிளாஸ்டிக் கேனை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மிதந்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது படகில் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செந்தில்குமார், காளிதாஸ் ஆகிய இரண்டு மீனவர்களையும் உயிரோடு மீட்டுக் கொண்டு வந்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல்படை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.  மீட்கப்பட்ட 2 மீனவர்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

6 fishermen alive after boat capsized 3 Fishermen's bodies recovered ..!


இதையடுத்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல்படை ஆய்வாளர் சுபா, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல்படை அலுவலகத்திற்கு தகவல் அளித்தார். புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் மாவட்ட கடலோர காவல் படையினர், தொடர்ந்து 8 மீனவர்களையும் தேடி வந்தனர். மத்திய மீம்புக்குழுவினரும் ஹெலிக்காப்டர் மூலம் தேடி வந்தனர். மேலும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களிடமும் தேடும் பணிக்காக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது. மீனவர்களின் உறவினர்களும் மல்லிபட்டினத்திற்கு வந்துவிட்டனர். மேலும் மீனவர்களை மீட்க கோரி சக மீனவர்கள் சாலை மறியல் போராட்டங்களையும் நடத்தினார்கள்.

இந்தநிலையில் 5 ந் தேதி நடுக்கடலில் டீசல் கேன்களை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடி தத்தளித்துக் கொண்டிருந்த காளீஷ்வரன், சரக்கொடியான், ரஞ்சித்குமார், முனீஷ்வரன் ஆகிய 4 மீனவர்களையும மீட்டு கடலுக்குள்ளேயே முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு படகு மூலம் மல்லிபட்டிணம் துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த 4 மீனவர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

6 fishermen alive after boat capsized 3 Fishermen's bodies recovered ..!

 

தொடர்ந்து மற்ற 4 மீனவர்களை தேடும் பணியில் கடற்படையினர். கடலோரக் காவல் படையினர் சக மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் 7 ந் தேதி முத்துப்பேட்டை பகுதியில் கந்தகுமார், மதன் ஆகிய இரு மீனவர்களின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த தேடுதலில் இன்று 8 ந் தேதி மாலை உமா கண்ணன் என்ற மீனவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு மல்லிபட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. சடலம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் கடற்கரையிலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மற்றொரு மீனவரான இலங்கேஸ்வரன் மட்டும் மீட்கப்படவில்லை. அவரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக கடலோர காவல்படையினர் கூறுகின்றனர். நடுக்கடலில் படகு கவிந்த விபத்தில் இதுவரை 6 மீனவர்கள் உயிருடனும், 3 மீனவர்கள் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மீனவரை மீட்கப்படும் முயற்சியில் உள்ளதால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பாக உள்ளது. அதிகாரிகள் இன்னும் துரிதமாக செயல்பட்டிருந்தால் மீனவர்களை உயிருடன் மீட்டிருக்களாம் என்கிறார்கள் மீனவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.