Skip to main content

3500 காய்கறி வியாபாரிகளில் 500 பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை!

Published on 02/07/2020 | Edited on 03/07/2020
500 out of 3500 vegetable vendors tested

 

கரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது காய்கறி மொத்த விற்பனை சந்தை பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்திலும், சில்லறை விற்பனை காய்கறி சந்தைகள் மாநகரில், சத்திரம் பேருந்து நிலையம், உழவர் சந்தை திடல், அண்ணா விளையாட்டு அரங்கம் அருகிலும், SIT அருகில் உள்ள இடங்களிலும் காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றன.

.காய்கறி சந்தையில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தது. மொத்த வியாபாரம் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். சில்லரை வியாபாரம் பின்பு தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டன.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து திருச்சியிலும் வியாபார வணிகர்களின் நலன் கருதி கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டது. பெண் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா உள்ளிட்டோர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

500 out of 3500 vegetable vendors tested

 

காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஜி கார்னரில் 150 நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. ஜூன் 15 ஆம் தேதி தேவர் ஹாலில் சுமார் 120 நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு தற்போது வரை வெளிவரவில்லை என கூறப்படுகிறது.

அன்றைய தினமே அரியமங்கலம் பால்பண்ணை அருகே உள்ள புதிய வெங்காய மண்டியில் சுமார் 160 நபர்களைத் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில, மாவட்ட நிர்வாகிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே நிலையில் இரண்டு டிரைவர்களுக்கு கரோனா  தொற்றிற்கு சிகிச்சை பெற்றார்கள்.

இங்கிலீஷ் காய்கறி ஊழியர் இரண்டு நபர்களுக்கும்  கண்டறியப்பட்டது. தக்காளி சில்லரை வியாபாரிக்கும் தொற்று ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்கள். அப்பொழுது வரகனேரி, எடமலைப்பட்டிபுதூர் பொதுமக்களும் சிகிச்சை பெற்றனர். தற்போது மதுரம் மைதானத்தில் சுமார் 100 வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

500 out of 3500 vegetable vendors tested


தற்போது வரை  ஜி கார்னர், தேவர் ஹால், புதிய வெங்காய மண்டி, மதுரம் மைதானம் என சுமார் 500 வியாபாரிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மொத்த வியாபாரிகள் 1500 நபர்களும், சில்லரை வியாபாரிகள் கடையில் 2000 நபர்களும், தினக்கூலி சுமைதூக்கும், கை வண்டி இழுக்கும் உழைப்பாளர்கள் சுமார் ஐந்தாயிரம் நபர்கள் இருப்பார்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த, சில்லரை வியாபாரிகளும் ,கூலி தொழிலாளர்களும் உள்ள இடத்தில் தற்போது நூற்றுக்கணக்கானவர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணனிடம் பேசுகையில், மொத்தம், சில்லரை அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனையை மேற்கொண்டு வியாபாரிகள் நலன் மற்றும் பொதுமக்கள் நலன் காக்க வேண்டும் என்றார். வியாபாரிகள் தன்னார்வமாக பரிசோதனை எடுத்துள்ளார்கள்.கரோனா தொற்றானது அறிகுறியுடனும், சிலருக்கு அறிகுறி இல்லாமலும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

காய்கறி சந்தையை பொருத்தமட்டில் மொத்த வியாபாரிகள் சில்லரை வியாபாரிகள் வியாபாரிகள் மாநகராட்சி, பகுதி, வார்டு, தெரு என வணிக கடைகள் வரை காய்கறிகள் செல்கின்றன. ஆகையினால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஏனென்றால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றாமல் சந்தையில் பொதுமக்கள் நடப்பதால் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பொது மக்கள் கூறுகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.