Skip to main content

செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆப்ரேசன்... ஜெனரேட்டர் இல்லை... அடுத்தடுத்து உயிர்பலி... மதுரை அரசு மருத்துவமனையின் அலட்சியம்

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

மதுரை அரசுமருத்துவமனையின் அலட்சியத்தால் அடுத்தடுத்து நடக்கும் இறப்புகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தை திருட்டில் இருந்து கர்பிணி பெண்ணுக்கு எயிட்ஸ் இரத்தம் ஏற்றியது வரை  தமிழகத்தை பதைபதைக்க வைத்து மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை

 

 

இந்நிலையில் மதுரையில் நேற்று மழை பெய்த காரணத்தினால் நகரெங்கும் ஆங்காங்கே மின்சாரம் தடைபட்டது. இதில் பல்நோக்கு அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் 15 க்கும் மேற்பட்டவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறபட்ட நிலையில்..

  

MADURAI

 

 

MADURAI

 

மேலூர் பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா, திண்டுகல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள், திருவில்லைபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன், ஆகியோருக்கு மின்சாரம் இல்லாமல் ஆக்ஜிஸன் தடைபெற்றதால் மூச்சுதிணறி இறந்தனர். அடுத்தடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணற, மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஆறுமுகம், செல்லதாய் என்ற இருவர் இறக்க நோயாளிகளின் உறவினர்கள் பதறியடித்து குவியத் தொடங்கினர்.  

 

MADURAI

 

என்னதான் நடந்தது என்று அங்கிருந்த மல்லிகாவின் மருமகன் கணேசன் நம்மிடம் கூறுகையில்... செவ்வாய் அன்று இரவு 6:30 மணிக்கு பலத்த காற்றுடன் மழைபெய்தது. அப்போது மாமியை அவசர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சையில் இருந்தார். தீடீரென மருத்துவமனை முழுவதும் மின்சாரம் தடைபெற்றது. நாங்கள் ஓடி அவர் சிகிச்சை பெறும் இடத்திற்கு சென்று என்ன ஆச்சு என்றோம் ”ஒரே கும்மிருட்டு என் செல்போன் டார்ச் லைட்டில் தான் அவருக்கு சிகிச்சை கொடுத்தார்கள். ஜெனரேட்டர் இல்லையா அவங்க உயிருக்கு எதுவும் ஆகாதா என்று கேட்டேன் உடனே என்னை வெளியே பிடித்து தள்ளிவிட்டார்கள்”.

 

அப்போது எங்கள் உறவினர்கள் அனைவரும் பதட்டத்திலேயே இருந்தோம். சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறினார்கள். அடுத்த சில நொடிகளில் ஸ்டச்சரில் வெளியில் கொண்டு போனார்கள். எல்லாமே செல்போன் வெளிச்சத்தில்தான் நடந்தது. 

 

MADURAI

 

அடுத்தடுத்து படுக்கையில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளின் அலறல் சத்தம் அய்யோ காப்பாத்துங்க மூச்சுவிட முடியாமல் தூக்கி தூக்கிப்போடுது என்று கத்த, சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மூன்று பேர்கள் என் கண் முன்னால் துடிதுடித்து இறந்தார்கள். அதில் என் மாமியாரும் ஒருவர். என்னால் தாங்க முடியவில்லை. டிஜிட்டல் உலகம் என்கிறார்கள் மதுரைதான் தென்மாவட்டத்திற்க்கு தலைநகரம் லட்சக்கணக்கான நோயாளிகள் இதை நம்பிதான் வருகிறோம். எங்களால் தனியார் மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்க்கமுடியாது. மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனை எல்லா வசதிகளும் இருக்கு என்கிறார்கள். ஆனால்  மிக மிக முக்கியமான அடிப்படை விசயம் மின்சாரம் அது தடைபெற்றால் மாற்று ஜெனரேட்டர் வசதிகூட சரியாக இல்லாமல் பழுதாகி பல உயிர்கள் பலியாவது என்ன நியாயம்?. இதைவிட கொடுமை இங்கிருந்த ஒரு நோயாளியின் உறவினர் கூறினார் நேற்று டார்ச்லைட் உதவியுடம் ஆப்ரேசனே நடந்திருக்கிறது. அது என்னாச்சுனே இப்ப வரைக்கும் சொல்லமாட்டிக்கிறாங்களாம் இந்த கொடுமையை என்ன சொல்றது.

 

 

வெளியில் ஒரு செருப்பு கடையில்கூட ஜெனரேட்டர் வச்சிருக்கான். இங்கு என்னடானா ஏழை மக்களின் உயிரை ஏளனமாய் நினைக்கிறாங்க. இதுக்கு நியாயம் வேண்டாமா? என்று கதறி அழுதார் கணேசன்...

 

அடுத்து மருத்துவமனையின் டீன் வனித்தா மேடத்தை பார்த்தோம்...

 

MADURAI

 

என்ன மேடம் தென்தமிழகத்தின் மிக முக்கிய பல்நோக்கு மருத்துவமனையில் ஒரு ஜெனரேட்டர் வசதி கூடவா இல்லை? இத்தனை உயிர் இழப்பிற்கு என்ன பதில் சொல்லபோகிறீர்கள் மக்களின் கொந்தளிப்பு இவ்வளவு அலட்சியமாக நிர்வாகம் இருக்கிறதே என்க...

 

அதற்கு டீன் வனிதாவோ ”அப்படியெல்லாம் இல்லை இறந்த ஐவருமே கரண்ட் கட்டானதால் சாகவில்லை காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையா இவர்கள் ஏற்கனவே மிக மோசமான நிலையில் இருந்தார்கள். 6.25 க்கு கரண்ட் கட்டானது உண்மைதான் ஆனால் இவங்க இறந்தது அதனால் அல்ல என்றார்.

 

என்ன மேடம் ஜெனரேட்டரை ஏன் ஆன் செய்யவில்லை? என கேட்டதற்கு..

 

இல்லை ஜெனரேட்டர் பழுதாக இருந்துள்ளது. அதை உடனடியாக சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுத்தோம் அதற்குள் இறந்ததால் எல்லோரும் இப்படி ஒரு வதந்தியை பரப்ப தொடங்கி உள்ளனர்.

 

அடுத்து காலையில் இறந்தவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களையும் இதோடு சேர்த்து விட்டனர் என்று முன்னுக்கு பின் பதில் அளித்தார் பொறுப்புள்ள டீன் வனிதா..

 

இந்த சம்பவத்தால் மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பகுதி பதட்டமாகவே காணப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.