Skip to main content

எடப்பாடிக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட பதிவுத்துறை உதவியாளர் வீட்டில் 5 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் சிக்கின

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

 

5 lakhs in cash and property documents were found in the house of a registry assistant known to be close to Edappadi!


சேலம் பத்திரப்பதிவுத்துறை ஊழியர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், அவருடைய வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

 

சேலம் இரும்பாலை அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் காவேரி (வயது 58). இவர், சூரமங்கலத்தில் உள்ள மேற்கு சரக பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். 

 

வருமானத்தைவிட 200 சதவீதம் வரை கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில், அக். 11- ஆம் தேதி காலை அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 

 

காலை 08.00 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 9 மணி நேரம் நடந்தது. இந்த சோதனையில் அவருடைய வீட்டில் இருந்து 20 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவருடைய மனைவி சாந்தி பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டதற்கான சில ஆவணங்களும் சிக்கின. மேலும், 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கைப்பற்றினர். 

 

காவேரியின் வங்கி கணக்குகள், அவருடைய குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் விவரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இளம்பிள்ளையில் உள்ள அவருடைய நெருங்கிய உறவினர்கள் இருவர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 

 

சேலத்தில் பல இடங்களில் வீடுகள், நிலங்களை தனது பெயரிலும் குடும்பத்தினர், பினாமிகள் பெயரிலும் வாங்கி போட்டிருப்பதாகச் சொல்கின்றனர். 

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட விவிஐபிக்களுக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டவர்தான் இந்த காவேரி. மாஜி விவிஐபிக்களுக்கு சேலத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்துகளை காவேரிதான் முன்னின்று பதிவு செய்து கொடுத்துள்ளார். 

 

இதனால் ஏற்பட்ட அறிமுகத்தால் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குள் முன்அனுமதி பெறாமலேயே எப்போது வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய அதிகாரம் பெற்றிருந்தார். அதிகார மட்டத்தில் இருப்போருடன் வலம் வந்ததால்,  பத்திரப் பதிவுத்துறையில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகளே கூட இவருடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலையில் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, மாஜி விவிஐபிக்களுக்கு பினாமியாக இருந்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

Next Story

“வளர்ச்சித் திட்டங்கள் கிடைத்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்” - எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Vote for admk to get development plans Edappadi Palaniswami campaign

திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் இருந்து வரக்கூடிய நமக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கு, தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சி கிடைக்க, தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி கிடைக்க, சுதந்திரமாக நாடாளுமன்றத்தில் பேசி மக்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதிமுக யாரையும் நம்பாமல் சொந்த காலில் நிற்கிறோம். மத்தியில் திமுக அரசு 17 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் செய்து காப்பாற்றியது. ஆனால் தற்போது ஏற்பட்ட சிறிய புயலுக்கே திமுக அரசு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறவில்லை. நிதியை முறையாக கேட்டு பெறுவது மாநில அரசின் கடமையாகும். ஒவ்வொரு முறையும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டு மாநில அரசு முறையாக ஆட்சி செய்யவில்லை.

இந்த ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்ற வெகு நாட்கள் இல்லை. அதிமுக விரைவில் ஆட்சியை அமைக்கும். திமுக அரசை ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள துறையூர் நகருக்கு அதிமுக அரசு ஆட்சியில் இருந்த போது தான் துறையூரில் இருந்து பெரம்பலூருக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அதேபோன்று காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது.  இதேபோன்று எண்ணற்ற நலத்திட்டங்கள் முசிறி, மண்ணச்சநல்லூர் சமயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது .

எனவே உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அதிமுக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும். எனவே அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி மற்றும் அதிமுக கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.