Skip to main content

44வது செஸ் ஒலிம்பியாட்: முதல் இடத்தில் இந்தியா! 

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

44th Chess Olympiad- India in first place!

 

44வது செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்றின் முடிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

 

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் நேற்று (29/07/2022) நடைபெற்றது. இதில், ஓபன் பிரிவு மற்றும் மகளிர் பிரிவில் மொத்தமாக 342 அணிகள் பங்கேற்றனர். ஆறு அணிகளாக 24 வீரர்களுடன் களம் இறங்கிய இந்திய அணியில், அனைவரும் வெற்றி பெற்றனர். இதனால் புள்ளிப் பட்டியலில் இந்திய அணிகள் முதலிடத்தைப் பிடித்தனர். 

 

ஓபன் பிரிவில் இந்தியா ஓபன்- ஏ அணி முதலிடத்தைப் பிடித்தது. ஸ்பெயின், போலந்து, அஜர்பைஜான், நெதர்லாந்து, உக்ரைன், ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா ஓபன்- 2 அணி, ஆர்மேனியா அணிகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. இதேபோன்று, மகளிர் பிரிவில் இந்தியா மகளிர் அணி- A, உக்ரைன், ஜார்ஜியா, போலந்து, பிரான்ஸ், அஜர்பைஜான், அமெரிக்கா, ஜெர்மனி, ஆர்மேனியா, கஜகஸ்தான் அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொல்லியல் துறை கொடுத்த ஒரு நாள் சர்ப்ரைஸ்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Women's Day Celebration; Notification issued by Department of Archaeology

இன்று (08.03.2024) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பல சுற்றுலாத் தலங்களில் இன்று இலவச அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளை பார்வையிடப் பயணிகளுக்கு இன்று இலவச அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை. இதனால் மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை பார்வையாளர்கள் இன்று கட்டணமின்றி கண்டு களிக்கலாம்.

அதேபோல் புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான சித்தன்னவாசலில் இன்று ஒருநாள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில் சித்தன்னவாசலில் எந்தவித கட்டணமும் இன்றி இன்று சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘விளையாட்டு வினையானது’ - சுற்றுலா வந்த மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Tragedy for students who came on tour Mahabalipuram

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 46 கல்லூரி மாணவர்கள் நேற்று (02.03.2024) செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். அதன்படி மாணவர்கள் முதலில் அங்குள்ள பல்லவ மன்னர்களின் புராதன சின்னங்களை பார்வையிட்டுள்ளனர். அதன்பின்னர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் உள்ள கடற்கரைக்குச் சென்று 10 மாணவர்கள் கடல் அலைகளில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென எழுந்த ராட்சத அலையில் 10 மாணவர்களும் சிக்கி கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு, கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் மீனவர்கள் விரைந்து வந்து 6 மாணவர்களை மீட்டனர். இவர்களில் விஜய் (வயது 18) கரைக்கு வந்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் மாயமான மோனிஷ் (19), பார்த்தி (18), ஷேசா ரெட்டி (18), பெத்துராஜ் பிரபு (19) ஆகிய 4 மாணவர்களை மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படை வீரர்கள் படகு மூலம் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 4 பேரில் ஷேசா ரெட்டி, மோனிஷ், பெத்துராஜ் பிரபு ஆகிய 3 பேரின் உடல்கள் இன்று (03.03.2024) கடலில் ஒதுங்கியது. இதையடுத்து 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.