Skip to main content

சிதம்பரத்தில் 42 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

 42nd Natyanjali Festival at Chidambaram

 

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 42-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரதவீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் சனிக்கிழமை மாலை தொடங்கியது. நாட்டியாஞ்சலி விழா பிப். 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார்.

 

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 1981-ல் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு 2014 வரை 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். இந்நிலையில், நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நடத்த தீட்சிதர்கள் அனுமதிக்காததால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்கு வீதியில் வி.எஸ் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

 

இதில் 42 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், ''பரத கலைக்கு முக்கியமானது பாவம். அந்த பாவத்தைப் புரிந்து பார்த்தால் நாட்டியத்தை நன்றாக ரசிக்க முடியும். இந்த கலை கொஞ்சம் கொஞ்சமாக திருடப்பட்டு கொண்டு செல்லப்படுகிறதோ என்ற அச்சம்; பயம் உள்ளது. பந்தநல்லூர் கிராமம் பரதநாட்டியத்தின் பெரிய ஸ்தலமாகும். பந்தநல்லூர் பின்னல் கோலாட்ட நடனம் என்பதை பந்தநல்லூர் பாணி எனக் கூறுவார்கள். தற்போது பந்தநல்லூரில் நடனமாடுபவர்கள் யாரும் இல்லை. சென்னை கலாஸ்தேத்திரத்தில் பந்தநல்லூர் பாணி என நடனம் சொல்லி கொடுக்கிறார்கள். ஆனால், பந்தநல்லூரில் நடனம் ஆடுபவர்கள் யாரும் இல்லை. கிராமங்கள், நகரங்களில் நாட்டியம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தற்போது குறைவாக உள்ளது. இக்கலை சென்னையைத் தாண்டி நியூயார்க் அல்லது வாஷிங்டன்னுக்கோ சென்றுவிடக் கூடாது. செல்லக்கூடாது என்பதை விட இப்பரதக் கலையை மொத்தமாக தாரைவார்த்து கொடுத்துவிடக் கூடாது. 2-ம் நூற்றாண்டிலிருந்து நமது பரதக்கலை தழைத்து வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனைப் பாதுகாக்க வேண்டும் என்றால், இது போன்ற திரளான ரசிகர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி முக்கிய அம்சமாக திகழ்கிறது'' என்று பேசினார்.

 

விழாவிற்கு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை குழுத்தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன் தலைமை வகித்தார். செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் வரவேற்றுப் பேசினார். விழாவில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ப.உ.செம்மல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கே.சக்திவேல், சார்பு நீதிபதி ஏ.உமாமகேஸ்வரி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகன்யா ஶ்ரீ, துணைத்தலைவர்கள் ஆர்.நடராஜன், ஆர்.ராமநாதன், செயலாளர் ஏ.சம்பந்தம், பொருளாளர் எம்.கணபதி மற்றும் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, ஆர்.சபாநாயகம், டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

நாட்டியாஞ்சலி விழாவில் மங்களூரு என்.புட்டூர் என்.மஞ்சுநாத் பரதம், திருவனந்தபுரம் உமா கோவிந்த் & விதுன்குமார் பரதம், சென்னை தேரஜஸ் நாட்டியப்பள்ளி மாணவியர்களின் குற்றால குறவஞ்சி நாட்டிய நாடகம், மைசூர் ஹரி ஹராநாகராஜ் மாணவ மாணவிகள் "சுதக்" நடனம். மைசூர் துர்கா நிருத்ய கலைக்கூடம் மாணவியர்கள் பரதம், சென்னை நாட்டிய குருகுலம் மாணவியர்கள் பரதம், ஊட்டி லாரன்ஸ் பள்ளி மாணவியர்கள் பரதம், சென்னை தீக்க்ஷா கிஷோர் பரதம், சென்னை மேக்னாராஜூ மற்றும் சகானா ஶ்ரீதர் பரதம், ஹைதராபாத் விஜயபால் பாத்லோத் மாணவ மாணவியர் குச்சுப்புடி நடனம், பெங்களூரு ஹரிப்பிரியா மற்றும் கார்த்தி ப்ரியா ஆகியோரின் பரதம், புதுச்சேரி அனீஷ் ராகவன் ஒடிஸி நடனம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப் பணிகள் குறித்து ஆய்வு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 study on tillage work at Chidambaram Natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் கோட்ட பொறியாளர் அசோகன் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் செந்தில்வேலன், மண்டல ஸ்தபதி, கோயில்கள் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கோயில் உழவாரப் பணிகள் குறித்த நிலையான ஆய்வுக் குழுவினர் கோயிலில் பல்வேறு இடங்களில் கோயில் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் தெற்கு கோபுர வாயில், மேல கோபுர வாயில், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து இணை ஆணையர் பரணிதரன், கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும் இது குறித்த தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோவில்களில் வெளி பிரகாரங்களில் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதையும், தெற்கு வீதி, கீழ வீதி கோபுரம் அருகில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மாட்டு சாணிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் அவதிப்படுவதாக உழவார பணிகள் ஆய்வுக் குழுவினரிடம் தெரிவித்தனர். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்கள்.

முன்னதாக ஆய்வுக் குழுவினர் கோயிலுக்கு உள்ளே வரும்போது இது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இந்து அறநிலையத்துறைக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஆய்வு குழுவினரிடம் கடிதம் அளித்துள்ளார். கோயிலில் உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்தது கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

‘சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்க’ - உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Nataraja Temple administration to submit income and expenditure account  orders High Court

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்குத் தடை விதிக்கக் கோரியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அறநிலையத்துறையின் மனுவில், பழமையான கோவில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது என உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளபோதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளதாகவும், எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை எனவும், கோவிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு அமர்வின் முன்பாக நடைபெற்று வந்தது. பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் கடைகளோ அன்னதான கூடமோ கட்டவில்லை என்றும், தற்காலிக அமைப்பில் அலுவலகம் தான் செயல்படுகிறது என விளக்கம் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, புராதனமிக்க எந்த கோவிலிலும் அனுமதியின்றி எவரும் கை வைக்க நீதிமன்றம் அனுமதிக்காது என்றும், கோவில்கள் பக்தர்களுக்கானது மட்டுமே என்றும், வேறு நோக்கத்தில் யாரும் கை வைத்தால் அவர்களை இந்த நீதிமன்றம் தடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தது உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த 3 ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீட்சிதர்கள் சபைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.