Skip to main content

பெண் தற்கொலை வழக்கில் 3 போலீசார் பணியிடமாற்றம்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

3 policemen transferred in the case of female

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மனைவி கோகிலா(36). இவர், கடந்த சனிக்கிழமை காலை தனது வீட்டில் சேலையில் தூக்கிட்டு சடலமாக தொங்கினார். அருகில் ஒரு நோட்டு தாளில் தன் மீது பொய் வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அதிகாலையில் வந்து இழுத்துச் சென்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் சாகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.

 

இந்த சம்பவத்தில் கோகிலாவின் கணவர் நீலகண்டன் கொடுத்த புகாரில் திமுக பிரமுகர் எம்.எம்.குமார், அவரது மனைவி புவனேஸ்வரி, கீரமங்கலம் காவல் நிலையம் எஸ்.ஐ ஜெயக்குமார், பெண் போலீஸ் கிரேசி மற்றும் கீரமங்கலம் காமராஜ், நெய்வத்தளி துரைமாணிக்கம் என 6 பேர் தன் மனைவி தற்கொலைக்கு காரணமானவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.

 

நடவடிக்கை கோரி உறவினர்கள், அரசியல் கட்சியினர் மேற்பனைக்காடு மற்றும் கீரமங்கலம் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் நீலகண்டன் கொடுத்த புகாரையும் பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யும் வரை பிரேதப் பரிசோதனைக்கு போகமாட்டோம் என்று கூறினார்கள். இந்த நிலையில், நேற்று அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் கோகிலா வீட்டிற்கு விசாரணைக்கு வந்து காத்திருந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கும் வரை விசாரணைக்கு வரவில்லை என உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.

 

தொடர்ந்து நேற்று மாலை அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உறவினர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசார் மீதும் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் என்பதை உறவினர்கள் கோரிக்கையாக முன் வைத்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்த பிறகு சடலத்தை பெற்றுக் கொண்டனர்.

 

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட கோகிலாவின் அருகில் இருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கீரமங்கலம் எஸ்.ஐ ஜெயக்குமார் மீமிசலுக்கும், பெண் போலீஸ் கிரேசி மணமேல்குடி, புவனேஸ்வரி நமணசமுத்திரம் ஆகிய காவல் நிலையத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை செய்யும் காவல் அதிகாரி மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.