மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், ஓ.பி.சி. பிரிவினருக்கு மருத்துவப் படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்க உள்ளதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது.