Skip to main content

வேன் கவிழ்ந்து 25 பேர் படுகாயம்! நேரில் சென்று ஆறுதல் சொன்ன எம்.எல்.ஏ! 

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

25 injured as van overturns MLA who went in person and said consolation!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாலி ஷேக் உசேன் பேட்டை பகுதியைச் தேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள விருகாவூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விஷேசத்திற்கு கலந்துகொள்ள ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர். 


அந்த வேன் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் சிப்காட் அருகே செல்லும்போது திடீரென வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் பயணம் செய்த அரசம்மாள், முருகவேல், ஏழுமலை, செல்லப்பெருமாள், வீரம்மாள், கொளஞ்சி, ஆஷா, தெய்வானை, ஷாலினி உட்பட சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். 

 

இது குறித்த தகவல் அறிந்த எடைக்கல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான வேனை கிரேன் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். 


இந்த விபத்து மற்றும் மீட்பு பணியால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த வேனன ஓட்டிச்சென்றவர், வாகனம் ஓட்டுவதில் போதிய அனுபவம் இல்லாமல் வேனை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த எடைக்கல் போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

25 injured as van overturns MLA who went in person and said consolation!

 

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் வேன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததை அறிந்த உளுந்தூர்பேட்டை திமுக எம்.எல்.ஏ மணிகண்டன், அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.