Skip to main content

25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையில் ஓட்டை... விவசாயிகள் கொந்தளிப்பு... திமுக போராட்டம்! 

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

25 crore dam block ... Farmers riot ... DMK struggle!

 

சாத்தனூர் அணை நிரம்பி அதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் பெண்ணையாறு வழியாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைக் கடந்து கடலூர் அருகே கடலில் கலக்கிறது.

 

இந்த ஆறு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கரைப் பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை வாழ வைத்துவருகிறது. இப்படி நீண்ட தூரம் பயணிக்கும் பெண்ணையாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் திருக்கோவிலூர் அருகே ஒரு தடுப்பணை மட்டும் கட்டப்பட்டது. இதன் வடபகுதியில் உருவாக்கப்பட்ட வாய்க்கால் மூலம் சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களும், அதேபோன்று தென் கரையில் இருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் மூலம் சித்தலிங்கமடம் வழியாகப் பயணம் செய்து, சுமார் 15 கிராம விவசாயிகளும் பயனடைந்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் பெண்ணை ஆற்றில் சில இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று பல்வேறு கிராம மக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்து, அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர். இதன் பயனாக விழுப்புரம் மாவட்ட எல்லையிலுள்ள தாளவனூர் -கடலூர் மாவட்ட எல்லையிலுள்ள ஏனாதிமங்கலம் ஆகிய இரு ஊர்களுக்கிடையே கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக அரசின் பொதுப் பணித்துறையால் செயல்படும் நீர்வள ஆதார அமைப்பு மூலம் 25 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது.

 

இதன் நீளம் 400 மீட்டர், உயரம் 3 மீட்டர். இந்தத் தடுப்பணை பணிகள் ஒரு ஆண்டிலேயே கட்டிமுடிக்கப்பட்டு மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தால் 2019 ஆம் ஆண்டு திறப்புவிழா செய்யப்பட்டது. இந்த தடுப்பணை மூலம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு, இருகரை பகுதிகளிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து. குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று திட்டமிட்டு கட்டப்பட்டது. மேலும் இப்பகுதியில் இருந்து இரு பகுதிகளிலும் பல்வேறு கிராமங்களுக்கு ஆழ்குழாய் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டமும் செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கும் என்று அந்த நம்பிக்கையோடும் மிகுந்த எதிர்பார்ப்போடு கட்டப்பட்டது இந்தத் தடுப்பணை.

 

25 crore dam block ... Farmers riot ... DMK struggle!

 

கட்டி திறக்கப்பட்டதும் பொதுமக்கள் விவசாயிகள் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் தடுப்பணை கட்டப்பட்டதை வரவேற்று சந்தோஷப்பட்டனர். ஆனால், சமீபத்தில் பெய்த மழையால் பெண்ணை ஆறு பெருக்கெடுத்து ஓடி வந்தது. இந்தத் தடுப்பு அணையில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் தேங்கி நின்றது. இதனைக் கண்டு சந்தோசமடைந்த பொதுமக்கள் சுற்றுலா செல்வது போல அந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி இருக்கும் காட்சியைப் பார்ப்பதற்காகச் சென்று வந்தனர். திடீரென்று நேற்று இந்த அணையின் தென்பகுதி கரையின் பக்கச் சுவரில் பெரும்துளை ஏற்பட்டு அணையில் தேங்கி இருந்த தண்ணீர் முழுவதும் அதன் வழியாக வெளியேறியது. இதனால் பக்கச் சுவர் உள்வாங்கி உள்ளது. அணையில் தேக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேறியதால் இப்பகுதி மக்களும் விவசாயிகளும் வேதனையில் உள்ளனர்.

 

இனிமேல் மழை பெய்து தண்ணீர் வருவதற்கு சாத்தியம் இல்லை. தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்பு இல்லை. தேங்கிய தண்ணீர் வெளியேறிவிட்டது.  25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையில் பக்கச் சுவரில் எப்படி ஓட்டை விழுந்தது. தரமில்லாமல் கட்டப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றார்கள் இப்பகுதி விவசாயிகள்.

 

25 crore dam block ... Farmers riot ... DMK struggle!

 

இதைக் கேள்விப்பட்ட திமுகவின் முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ-வுமான பொன்முடி, கட்சியின் மாவட்டச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் அந்தப் தடுப்பணை உள்வாங்கி தண்ணீர் வெளியேறிய இடத்தைப் பார்வையிடச் சென்றனர். அதன் நிலைமையைப் பார்த்த அவர்கள், "இந்த அணை\யைக் கட்டுவதற்காக 25 கோடியை, ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க காரணமாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 கோடியில் அணை தரமாகக் கட்டப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தரமற்ற அணை கட்டிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தடுப்பணை அருகிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.