Skip to main content

24 மணி நேரமும் மது விற்பனை! கள ஆய்வில் அதிர்ச்சி! 

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

24-hour liquor sales! Shock in the field study!

 

சென்னையில் மக்கள் தொகை அதிகரிப்பால் குற்றங்களும் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் வகையில் தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் புதிதாக உருவாக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள காவல் மாவட்டங்கள் மறு சீரமைக்கப்பட்டன.

 

அந்தவகையில் சென்னை கோயம்பேடு காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் கீழ் மூன்று உதவி ஆணையர் சரகங்கள் உருவாக்கப்பட்டு கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், ராமாபுரம், வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம், சி.எம்.பி.டி, விருகம்பாக்கம், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய 8 காவல் நிலையங்கள் செயல்படும் வருகிறது.

 

24-hour liquor sales! Shock in the field study!

 

பிற்பகல் 12 மணிமுதல் இரவு 10 மணிவரையில் தான் அரசு மதுபானக்கடை செயல்பட வேண்டும். ஆனால், விதியினை மீறி வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மதுபானக்கடை, அதே சாலையில் விருகம்பாகம் பகுதி, ஸ்ரீதேவி குப்பம் சாலையின் மகளிர் காவல் நிலையத்தின் பக்கவாட்டில் உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரமும் பார்களில் மது விற்பனை நடந்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதே சாலையில் சற்று தொலைவு சென்றால் மதுரவாயில், கோயம்பேடு மார்க்கெட் பக்கவாட்டில் இருக்கும் மதுக்கடையிலும் 24 மணி நேரமும் விற்பனை செய்து வருவதால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியூர்களில் இருந்து வருகின்ற மக்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் நிலையில் இருப்பதாகவும், மேலும் வளசரவாக்கத்தில் இரவு நேரங்களில் பெண்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பாதையிலே உள்ளதாலும், காவல்துறை கண்டும் காணாமல் செல்வதாலும் மேலும் அச்சமாக உள்ளதாக அம்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

 

இது குறித்து நாம் நேரில் சென்று பார்த்தபோது, பொதுமக்கள் சொன்னதை போன்றே அந்தப் பகுதியில் அரசு அனுமதித்த நேரத்தை மீறி மது விற்பனை நடைபெற்றது. காவல்துறை வாகனம் இரவு அந்த வழியாக கண்டும் காணாமலும் சென்றது. உடனே உள்ளே சென்று மது விற்பனை கூடத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டு, விற்பனையாளர்களிடம் பேச்சு கொடுத்தோம். என்ன இரவில் இப்படி மது விற்பனை செய்வதால் காவல்துறை பிடிக்காதா என்றதற்கு அது எப்படி பிடிக்கும் நாங்கள்தான் ஏ.சிக்கும், இன்ஸ்பெக்டருக்கும், மாமூல் கொடுக்கிறோமே என பேசினார்.

 

24-hour liquor sales! Shock in the field study!

 

அதே போல, அங்கு இயங்கும். அரசு மதுபானக்கடைகளில் பணிபுரியும் சூப்பரவைசர் உடந்தையோடு இவர்கள் பணம் இல்லாமலே மது பானங்களை பெற்று பிறகு மறுநாள் அரசு கணக்குகளை முடிக்கின்றனர். இவர்களோடு வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸ் மற்றும் ஏ.சி கௌதம் ஆகியோருக்கு கட்சிதமாக கவனிப்புகள் இருப்பதாலே கண்டும் காணாமல் சென்றுவிடுவதாக புகார்கள் எழுந்தன. 

 

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸிடம் கேட்ட போது, “அப்படியா, என்னிடமும் மக்கள் சொல்லிருந்தாக, நான் இப்போ லீவில் இருக்கிறேன். இனிமேல் நடக்காமல் பாத்துக்கிறோம்” என்றார். அதே போல ஏ.சி கௌதம் அவர்களிடம் விசாரித்த போது, “அப்படி ஏதுவும் இல்லை, அது போன்று நடந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம்” என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.