Skip to main content

20 வருடங்களாக கள்ளச்சாராயம்... கண்டுகொள்ளாத காவல்துறை... களமிறங்கிய வனத்துறை...

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், சிங்காரப்பேட்டை வனச்சாரத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டுநாடுக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்காரப்பேட்டை வனச்சாரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டிய தனியார் நிலங்களில் கள்ளச்சாரயாம் பலப்பல ஆண்டுளாக காய்ச்சப்பட்டு வருகிறது.

 

 For 20 years the illicit liquor... Uncovered Police... Forest Department action

 

இந்த கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டும்மென கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதி மலைவாழ் மக்கள் சார்பில் பலமுறை பலர் வனத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு தந்தனர். யாரும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. அதிக நெருக்கடி வரும் நேரத்தில் மட்டும் காவல்துறை, சிலரை பிடித்து வந்து சாராயம் காய்ச்சினார்கள் என வழக்கு போடுவதோடு சரி. சாராய பானைகள், ஊறல் எங்கே எனக்கேட்டால், அந்தயிடத்துக்கு போக முடிவதில்லை, வனத்துறை ஊழியர்கள் ஒத்தொழைப்பதில்லை என காரணம் கூறி தப்பி வந்தனர்.

 

 For 20 years the illicit liquor... Uncovered Police... Forest Department action

 

இந்நிலையில் திருப்பத்தூர் வட்ட வனத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அதிரடியாக வனத்துக்குள், வனத்தை ஒட்டிய பகுதிக்குள் சாராயம் காய்ச்சுவதை தடுக்க அதிரடி ரெய்டு செய்து வருகின்றனர். அதன்படி, திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் 21 பேர் கொண்ட குழுவினர் மாம்பாக்கம் காப்புக்காடு, மேல்பட்டு, சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு, சிங்காரப்பேட்டை மேற்கு பகுதிகளில் நடத்திய ரெய்டில் 1000 லிட்டர்க்கு மேற்பட்ட சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்துள்ளனர்.

 

 For 20 years the illicit liquor... Uncovered Police... Forest Department action

 

அதோடு, வனத்தை ஒட்டியுள்ள பட்டா நிலப்பகுதியிலும் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ள வனத்துறை, அவர்கள் மூலமாகவே வனத்துக்குள் சாராய ஊறல் போட்டவர்கள், சாராயம் காய்ச்சியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

 

 

வனத்துறையே இந்த விவகாரத்தில் தீவிரமாக களம்மிறங்கியுள்ளது. களம்மிறங்க வேண்டிய காவல்துறை இதுப்பற்றி அக்கறை கொள்ளாமல் அசட்டையாக உள்ளது என குற்றம்சாட்டுகிறார்கள் இப்பகுதி பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.