Skip to main content

சதித்திட்டம் தீட்டிய இளைஞர்கள்; போலீஸ் விசாரணையில் பகீர் - பொள்ளாச்சியில் பரபரப்பு!

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

2 people arrested in connection with  his friend case in Pollachi

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே அமைந்துள்ளது எஸ். சந்திரபுரம். இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் அருண்கார்த்திக். 26 வயதான இவர் தனது படிப்பை முடித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை பாதுகாத்து வந்தார்.இந்நிலையில், அருணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகிய இரண்டு பேர் நண்பர்களாக இருந்தனர்

 

மேலும், இவர்கள் மூவரும் சேர்ந்து தனியாக தொழில் தொடங்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களுக்குள் காலப்போக்கில் சிறு சிறு உரசல்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அருணுக்கும் சூரியபிரகாஷிற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

இத்தகைய சுழலில், கடந்த 10 ஆம் தேதியன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற அருண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அருண்கார்த்திக்கை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, உடனடியாக பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு சென்ற பெற்றோர் தன்னுடைய மகனை காணவில்லை என புகார் அளித்தனர்.

 

அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் காணாமல் போன அருண்கார்த்திக் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், அருணின் நண்பர்களான சூரியபிரகாஷ் அரவிந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அருண் காணாமல் போனதற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர்களை அனுப்பிவிட்டனர். இத்தகைய சூழலில், செல்போன் சிக்னல் தொடர்ந்து ஒரே இடத்தை காண்பித்து வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சூரியபிரகாஷ் அரவிந்த் ஆகியோரை மீண்டும் அழைத்து போலீஸ் பணியில் விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே, போலீசாரிடம் அவர்கள் சொன்ன தகவல்கள் முன்னுக்கும் பின் முரணாக இருந்துள்ளது. ஒருகட்டத்தில், இதுக்குமேல் தாக்கு பிடிக்க முடியாத இருவரும், போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளனர்.

 

கடந்த 10 ஆம் தேதியன்று அருண்கார்த்திகை செல்போனில் தொடர்புகொண்ட சூரியபிரகாஷ், அவரை மது அருந்த அழைத்துள்ளார். அப்போது, அருண், சூரியபிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகிய மூவரும் சேர்ந்து எஸ். சந்திரபுரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு அருகில் மது அருந்தியுள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நேரத்தில், இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, தலைக்கேறிய போதையில் இருந்த சூரியபிரகாஷும் அரவிந்தும் சேர்ந்துகொண்டு அருண் கார்த்திகை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், இதில் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சூரியபிரகாஷும் அரவிந்தும் சேர்ந்து அருணின் உடலை அங்கேயே புதைத்துவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதன்பிறகு, இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட சூரியபிரகாஷ் அரவிந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது, பண தகராறில் நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நகைகள் கொள்ளைச் சம்பவம்; நூதன முறையில் வலம் வந்த கொள்ளையன் கைது

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
coimbatore Jewelery issue police action

கோவை மாவட்டம் காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி ஏசி வென்டிலேட்டர் வழியே துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர், சுமார் 200 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணைக் காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்டமாக அந்தக் கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளைத் திருடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் மீது தருமபுரி மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீசார் இவரைத் தேடி வருவதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் ஆனைமலைக்கு விரைந்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரது வீட்டிலும், அவரது நண்பர் சுரேஷ் என்பவர் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த கொள்ளையன் விஜயகுமார் வீட்டில் இருந்தும், ஆனைமலையில் உள்ள அவரது நண்பர் சுரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி இருந்தனர்.

இந்நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான விஜயகுமாரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் ஐயப்ப பக்தர் போல் வேடம் அணிந்து வலம் வந்த நிலையில், போலீசார் இவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் போலீசாரால் கைது செய்யப்பட்ட விஜயகுமார் விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.

Next Story

வீட்டு வேலைக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Youth misbehave with a 13-year-old girl while doing domestic work

அரியானா குர்காவன் பகுதியில் உள்ள வீட்டில் வேலை செய்வதற்காக 13 வயது சிறுமியை மாதம் 9 ஆயிரம் சம்பளத்திற்கு கடந்த ஜூன் மாதம் வேலைக்கு சேர்த்துள்ளனர். முதல் இரண்டு மாதத்திற்கு மட்டும் அந்த பெண்ணின் தாயாருக்கு சம்பளப் பணத்தை வீட்டின் உரிமையாளர் சசி என்ற பெண் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின் சம்பளப்பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். அத்தோடு, சிறுமியை பார்க்க கூட அவரின் தாய்க்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், சிறுமியை வேலைக்கு சேர்த்த நாள் முதல் அவருக்கு சரியான உணவு கொடுக்காமல் தொடர்ந்து கொடுமை படுத்தி வந்ததுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் சசி சிறுமியை தாக்கி, இரும்பு கம்பி உள்ளிட்டவைகளால் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அத்தோடு, அவரது இரு மகன்களும் சிறுமியின் ஆடைகளை களைத்து, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் சிறுமியை கட்டி வைத்து, கைகளில் ஆசிட்டை ஊற்றி நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். 

இந்த நிலையில் சிறுமியின் தாய், தனது உறவினருடன் நேராக அந்த வீட்டிற்கு வந்துபார்த்து சிறுமியை மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகளுக்கு நடந்த கொடுமைகளை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சசி மற்றும் அவரது 2 மகன்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.