Skip to main content

ஆற்றில் மூழ்கிய சிறுவனை மீட்கச் சென்றவரும் உயிரிழப்பு - விக்கிரவாண்டியில் சோகம்...

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

a river

 

விக்கிரவாண்டி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற போது மூழ்கிய சிறுவனை மீட்கச் சென்றவரும் உயிரிழந்துள்ள சம்ப்வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள மதுரபாக்கத்தில் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் குமார். இவர் கூலித் தொழிலாளி. இவரது உறவினர் மகன் அஜித் (9) உள்ள இவர் 4ஆம் வகுப்புப் படித்து வருகிறார்.

 

நேற்று மாலை இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள சாரங்கபாணி ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். அதில் இறங்கிக் குளிக்கும்போது அஜித், தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதைக் கவனித்த குமார், அஜித்தைக் காப்பாற்றுவதற்க்காக தண்ணீரில் இறங்கியுள்ளார். இருவரும் தண்ணீருக்கு அடியில் இருந்த சேற்றில் கால் சிக்கி கரையேற முடியாமல் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

 

குளிக்கச் சென்ற இருவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் சங்கராபரணி ஆற்றில் சென்று தேடியுள்ளனர். ஆற்றின் கரையில் அவர்கள் விட்டுச்சென்ற துணிகள் மட்டும் கிடந்துள்ளது. இதைக் கண்டு சந்தேகமடைந்த அவர்கள் அங்கிருந்து தண்ணீரில் இறங்கித் தேடியுள்ளனர். இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துபோன சடலமாக மீட்கப்பட்டனர்.

 

இதுகுறித்து விக்ரவாண்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கிய சிறுவன், அவரைக் காப்பாற்றச் சென்ற குமார் ஆகிய இருவரும் இறந்து போன சம்பவம் மதுரபாக்கம் கிராம மக்களை பெரும்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

http://onelink.to/nknapp

 

விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது இதுபோன்று தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள் சிறுமியர் இறப்புகள் தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகின்றன. முன்பெல்லாம் கிராமப்புறங்களில் வளரும் பிள்ளைகள் பொதுவாக நீச்சல் கற்று இருப்பார்கள். ஆறு குளம் கிணறு இப்படிப்பட்ட நீர்நிலைகளில் சர்வ சாதாரணமாக இறங்கிக் குளிப்பார்கள். கரை ஏறுவார்கள். நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் சிக்கிக் கொள்ளும் போது அவர்களைத் துணிந்து சென்று காப்பாற்றிக் கரை சேர்ப்பார்கள். தற்போதுள்ள கிராமத்துப் பிள்ளைகள் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் சிக்கி இறந்து போகும் நிலை அதிகரித்துள்ளது. கிராமப்புற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கற்றுக் கொடுக்க முன்வருகிறார்கள். அதேபோன்று வாழ்வியலை எதிர்கொள்ளும் நீச்சலையும் கற்றுக் கொடுக்க முன் வரவேண்டும் என்கிறார்கள் கிராமப்புறங்களில் வாழும் முதியோர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை; மர்மம் நிறைந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தாசில்தார் ஆய்வு

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

Tahsildar study at the mysterious Anbu Jyoti Ashram

 

விழுப்புரத்தில் மூடப்பட்ட அன்பு ஜோதி ஆசிரமத்தில் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூர் எனும் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அன்பு ஜோதி என்ற மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் நடந்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜபருல்லா என்பவர் இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு காணாமல் போனதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

 

விசாரணையின் அடிப்படையில் கடந்த பத்தாம் தேதி காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது 142 பேரை காவல்துறை அதிகாரிகள் மீட்டனர். அதில் 109 பேர் ஆண்கள், 32 பேர் பெண்கள், ஒரு குழந்தை. விசாரணையின் அடுத்தடுத்த கட்டமாக பல்வேறு தகவல்கள் வெளியாயின. முறையாக அனுமதி பெறாமல் காப்பகம் நடந்து வந்ததும், அதேபோல் அங்கு தங்கியிருந்த ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சங்கிலியில் கட்டிப்போட்டு பலர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அங்கே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

அதனைத் தொடர்ந்து காப்பகத்தின் உரிமையாளர் ஜூபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு இடையே நேற்று மாலை அன்பு ஜோதி ஆசிரமம் மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது விக்கிரவாண்டி தாசில்தார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆசிரமத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

Next Story

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் பயனாளர்களுக்கு ஆணை வழங்கிய எம்.எல்.ஏ.! 

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

MLA who issued the order to the beneficiaries of the housing scheme for all!

 

தமிழ்நாடு அரசு, அனைவருக்கும் வீடு திட்டத்தைத் துவக்கி அதனை நடைமுறைப் படுத்திவருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தி, அத்தொகுதியில் உள்ள 48 பயனாளிகளுக்கு ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஆணைகளை வழங்கினார். மேலும், 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பையும் பயனாளர்களுக்கு வழங்கினார். 

 

MLA who issued the order to the beneficiaries of the housing scheme for all!

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயசந்திரன், ஒன்றிய திமுக செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெய.ரவிதுரை, ஒன்றிய குழு தலைவர் சங்கிதா அரசி ரவிதுரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.