Skip to main content

நகை சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் சுருட்டல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் திடீர் தலைமறைவு

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

2 Crore rupees rolled by conducting jewelery lottery; 6 members of the same family suddenly disappeared!

 

சேலத்தில் நகை சேமிப்பு திட்டம் நடத்தி 2 கோடி ரூபாய் வரை சுருட்டிக்கொண்டு, ஒரு குடும்பமே திடீரென்று மாயமாகிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் குகை பச்சையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (72). இவருடைய மகன் ஆனந்த்பாபு (38). இருவரும் நகை தொழில் செய்து வருகின்றனர். நகை சேமிப்பு திட்டம், வாராந்திர சீட்டு சேமிப்புத் திட்டங்களையும் நடத்தி வந்தனர். அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் இவர்களிடம் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர். முதிர்வு காலம் அடைந்த பிறகும் முதலீட்டுக்கான வட்டி, முதிர்வுத்தொகையை தராமல் ராமமூர்த்தி, ஆனந்த்பாபு ஆகியோர் காலம் கடத்தி வந்துள்ளனர்.

 

அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்கி வருவதால் முதலீட்டாளர்கள் தினமும் அவர்களுடைய வீட்டிற்கே சென்று பணத்தைக் கேட்டுள்ளனர். நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, ராமமூர்த்தி, அவருடைய மனைவி கஸ்தூரி (67), மகன் ஆனந்த் பாபு, இவருடைய மனைவி ஐஸ்வர்யா, இவர்களின் இரண்டு குழந்தைகள் என 6 பேரும் திடீரென்று குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.

 

ராமமூர்த்தியின் மகள் சாந்தா, வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அவர்கள் சென்ற இடம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அதேநேரம், தந்தை உள்ளிட்ட அனைவருடைய அலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தா, இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் செப். 29ம் தேதி இரவு புகார் அளித்தார்.

 

நகை சேமிப்பு திட்டம், ஏலச்சீட்டு நடத்தி வந்த ஆனந்த்பாபு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளதாக தெரிகிறது. இந்த வீட்டை முதலீட்டாளர்களின் பணத்தில் இருந்துதான் கட்டினார் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் அவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்களா? அல்லது வெளியூர் சென்று விட்டார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.