Skip to main content

மூன்று நாட்களுக்கு 144 தடை:ஒட்டப்பிடாரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. பாதுகாப்புப் பணிகள் குறித்து தமிழக தேர்தல் சிறப்பு டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா, தென் மண்டல ஐ.ஜி.யான சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒட்டப்பிடாரத்தில் நடந்தது. இடைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது பாதுகாப்புகளைப் பலப்படுத்துவது, சமூக விரோதிகளைக் கண்டறிந்து தடுப்பது, மற்றும் தேர்தலை சுமூகமாக நடத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அதிகாரகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

 

 144 banned order for three days: security arrangements in Ottapidaram

 

மாவட்ட காவல்நிலையப் பகுதிகளில் தேர்தலின் போது சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்க வாய்ப்புள்ளது என்ற காரணத்தினால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் காவல் துறையின் கண்காணிப்பிலும் உள்ளனர். தொகுதியில் உள்ள 257 வாக்குச் சாவடிகளில் மூன்று கம்பெனி மத்திய  தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும 6 டி.எஸ்.பி. கம்பெனியும் உள்ளது. மொத்தம் 3500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். தேர்தலை சுமூகமாக நடத்த தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புகளில் ஈடுபடுவர் என்றார் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா.

 

 144 banned order for three days: security arrangements in Ottapidaram

 

இதனிடையே ஒட்டப்பிடாரத்தில் இருக்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல், வரும் 12ம் தேதி காலை வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 வது பிரிவின் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். விழா தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.