Skip to main content

1.20 கோடி ரூபாய் தொட்டியில் நீர் கசிவு; பயன்பாட்டிற்கு முன்பே பல்லிளிக்கும் நீர்த்தேக்க தொட்டி

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

nn

 

 

நீர்த்தேக்க தொட்டி மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே நீர் கசியும் நிலையில் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சாவூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

மத்திய அரசின் 'அம்ரு' திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் வடக்கு வாசல் ஏழாவது வார்டு பகுதியில் சுமார் ஒரு 1.20 கோடி ரூபாய் செலவில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதற்காக காத்திருக்கும் இந்த நீர் தொட்டியில் சோதனை முறையாக நீரானது நிரப்பப்பட்டது. அப்பொழுது தொட்டியைச் சுற்றிலும் நீர்க்கசிவு ஏற்பட்டது.

 

தரமற்ற முறையில் கட்டுமானம் இருப்பதால் நீர் கசிவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதேபோல் 20 இடங்களில் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ள நிலையில் அவற்றையும் ஆய்வுசெய்து அவற்றின் கட்டுமானங்களை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

 

தஞ்சை மேயர் சார்பில், 'கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த தொட்டிகள் கட்டப்பட்டது. இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக சோதனை செய்யப்பட்டது. முறையாக சீரமைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். எனவே மக்கள் யாரும் அதிருப்தி அடைய வேண்டாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.