Skip to main content

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சம்!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

10th public board exam tamilnadu students and parents


தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து சென்னை, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைத் தனிமைப்படுத்தி வைத்து கண்காணிக்க கல்லூரிகள், பள்ளிகளை அரசாங்கம் முறைப்படி பெற்றுள்ளது.
 


அப்படிப் பெறப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் அறைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உட்பட சில மாவட்டங்களில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள். அவர்களது குடும்பத்தார், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் இங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜூன் 15- ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் எனக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதான் பெற்றோர்களை அச்சப்பட வைத்துள்ளது.

இதுப்பற்றி மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், பள்ளிகளில் உள்ள அறைகளில் தான் அறைக்கு 5 பேர், 10 பேர் என கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தாரை தங்கவைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படித் தங்க வைக்கப்பட்டுள்ள பலருக்கும் கரோனா எனத் தெரியவந்து. அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்படிப்பட்ட அறைகளில் தான் இன்னும் 20 நாளில் எங்கள் பிள்ளைகள் போய் தேர்வு எழுதவுள்ளார்கள். அந்த அறைகளில் தேர்வு எழுத எந்த தைரியத்தில் பிள்ளைகளை அனுப்புவது எனக் கேள்வி எழுப்புகிறவர்கள்.
 

 


பள்ளிகளில் உள்ளவர்களைக் கல்லூரிகளுக்கு மாற்றிவிட்டு பள்ளியின் வகுப்பறைகளைத் தேர்வுக்கு முன்பாக கிருமிநாசினி தெளித்து, சில நாட்களுக்கு அந்த அறைகளை யாரும் உபயோகப்படுத்தாதபடி செய்தாலாவது நன்றாகயிருக்கும், இதை அரசாங்கம் உடனடியாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளைத் தேர்வுக்கு அனுப்பும் போது கொஞ்சம் பயமில்லாமல் இருக்க முடியும். இதனை உடனடியாக கல்வித்துறை செய்ய வேண்டும் என்கிறார்கள்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.