Skip to main content

கர்ப்பிணியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி... இளைஞர் மீது வழக்கு!

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

10th class student admitted to hospital as a pregnant ... Case against youth!

 

பள்ளி மாணவி ஒருவர்  கர்ப்பிணியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

பள்ளியில் படிக்கும்போதே அச்சிறுமியை இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார் ராஜபாண்டி. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் ஆத்திரத்தில் சத்தம் போட்டுள்ளனர். ஏனென்றால், அச்சிறுமிக்கு ஒரு அக்காவும், தங்கையும் இருக்கின்றனர்.  அவர்களது எதிர்காலம் குறித்து பெற்றோர் கவலைப்பட்டனர். இந்நிலையில், சிறுமியின் பெற்றோரும் ராஜபாண்டியின் பெற்றோரும் கலந்து பேசி, கடந்த 30-8-2021 அன்று ராஜபாண்டியின் வீட்டில் வைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ராஜபாண்டியும் அச்சிறுமியும் கணவனும் மனைவியுமாக வாழ்ந்து வந்தனர்.

 

அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10-வது வகுப்பு படித்துவந்த அச்சிறுமியை, 9 மாத கர்ப்பிணியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்த்துள்ளனர். அரசு மருத்துவமனையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு தகவல் கிடைக்க, பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்து வாக்குமூலம் பெற்று, சிறுமியின் அம்மா, அப்பா, கணவர்(?) ராஜபாண்டி, அவருடைய அம்மா, அப்பா பொன்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுவும் குழந்தைத் திருமணம்தான். ஆனால், புகாரளித்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரி. இவருடன் பணியாற்றும் உறுப்பினர் பாண்டீஸ்வரிக்கு, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 மூலம்,  சிறுமி ஒருவருக்கு நடந்த குழந்தைத் திருமணம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. உடனே, நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  

 

அந்தச் சிறுமி உள்ளூர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 11-வது வகுப்பு படிக்கிறார். தனது உறவினர் குருசாமியின் மகன் சுரேஷ்குமாரிடம் காதல் வயப்பட்டிருக்கிறார்.  4 மாதங்களுக்குமுன் சுரேஷ்குமார், காதலியான அச்சிறுமியிடம்  ‘நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்..’ எனக் கூறி, நெருங்கிப் பழகியிருக்கிறார். அதனால், அச்சிறுமி மூன்று மாத கர்ப்பமடைய, கடந்த ஜூன் 3-ஆம் தேதி, திருவண்ணாமலை – நரிப்பாறையில் உள்ள கோவிலில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். 

 

விசாரணையின் முடிவில், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை 3 மாத கர்ப்பமாக்கிய சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரியும் அவருடன் பணியாற்றுபவர்களும் சேர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று புகாரளிக்க, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.