Skip to main content

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

ரகத

 

வன்னியர்களுக்கு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.


நீண்ட நாட்களாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில், இன்று தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி பேரவையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. எம்.பி.சி.யில் உள்ள 20% இடஒதுக்கீட்டில் சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும், இதர பிரிவினருக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்தை நாடிய வழக்கறிஞர்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
A.D.M.K. internal party matter A lawyer approached the Election Commission

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் அளிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அவைத் தலைவருக்கு அதிகாரம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

'ஓபிஎஸ் ஒரு வெத்துவேட்டு'-சி.வி.சண்முகம் சாடல்  

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
'OPS Or Vethuvettu' - CV Shanmugam Chatal

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகளை அதிமுக முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ''முதன் முதலாக ஒரு மத்திய கேபினட் அமைச்சரை பெற்றுத்தந்தது அதிமுக. பாண்டிச்சேரி நாடாளுமன்ற உறுப்பினரை அன்றைக்கு மத்தியில் கேபினட் அமைச்சராக முதன் முதலில் ஒரு மாநில கட்சி  பெற்றுக் கொடுத்தது. அது இந்த பாண்டிச்சேரிக்கான பெருமை. அதிமுகவிற்கு அந்த உரிமையை பெற்றுக் கொடுத்த வீரமும் திறமையும் இருக்கிறது. இங்கு இருக்கின்ற காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பாண்டிச்சேரி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி இருக்கிறார். எங்கள் தலைமையில் சிறப்பான வெற்றி கூட்டணி அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். அது விரைவில் அறிவிக்கப்படும். தொகுதி பங்கீடு பற்றியோ, கூட்டணி பற்றியோ எங்களுடைய கழகப் பொதுச் செயலாளர் விரைவில் அறிவிப்பார். ஓபிஎஸ் என்பவர் ஒரு வெத்துவேட்டு. அவருடைய சகாப்தம் முடிந்து விட்டது. இன்றைக்கு அவர் பெருங்காய டப்பா சத்தம் போடுவது போல் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வதை யாரும் காது கொடுத்து கேட்கத் தயாராக இல்லை'' என்றார்.