Skip to main content

“தொண்டர்களை மதித்து நடக்கவேண்டும்..” - திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

"You should respect the party members." Minister's instruction to DMK

 

தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.கி.சரவணன், வி.சி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, "மாவட்ட தி.மு.கவில் புதிதாக பல நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். அனைவரும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். சரியாகப் பணியாற்றாவிட்டால் 6 மாதத்தில் நிச்சயம் மாற்றப்படுவார்கள். கட்சியில் எப்பொழுதும் உழைத்தவர்களுக்கு தகுந்த மரியாதை உண்டு. தொண்டர்களை மதித்து நடக்க வேண்டும். அவர்களை மதித்ததால் தான் இன்று நான் எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக இருக்கிறேன். இன்னும் ஒரு ஆண்டில் பாராளுமன்றத் தேர்தல் வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், கடலூர் 2 பாராளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.

 

கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஞானமுத்து, சக்திவேல், சுதா சம்பத், ஒன்றிய செயலாளர்கள் தங்க.ஆனந்தன், பொறியாளர் சிவக்குமார், திருமாவளவன், விஜயசுந்தரம், கடலூர் மாநகராட்சி செயலாளர் கே.எஸ்.ராஜா, வடலூர் நகர் மன்றத் தலைவர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.பி.ஆர்.பாலமுருகன், ஜேம்ஸ் விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது