Skip to main content

முதலமைச்சருடன் கைகோர்த்த தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து குறி வைக்கப்படும் காரணம் என்ன?

Published on 13/03/2023 | Edited on 14/03/2023

 

- தெ.சு.கவுதமன்

 

Why is Tejashwi Yadav, who joined hands with the Chief Minister, constantly targeted?

 

பீகார் மாநிலத்தின் லாலு பிரசாத் யாதவின் புதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீஹார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் முழுவீச்சில் வளர்ந்து வரும் இளம் தலைவராக இருக்கிறார். இன்னும் ஓராண்டு காலத்தில் அங்கே பொதுத்தேர்தல் வரவுள்ள சூழலில், அடுத்த முதல்வராக அவர் வரக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவரை ஒழித்துக்கட்டுவதற்கான பல்வேறு முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

 

சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்றதிலிருந்தே தொடர்ச்சியாக பரபரப்புச் செய்திகளில் பேசப்பட்டு வருகிறார். தமிழ்நாடு முதல்வரின் பிறந்த நாளில் கலந்துகொண்டபோது, "நமது நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெற்று வருகிறது. இதை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. வலுவான ஒரு மாற்றுச் சக்தியை உருவாக்க முதல்வர் ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சமூகநீதியைப் போதிக்கும் தமிழ்நாட்டை பார்த்து மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். சோசலிசம் மற்றும் சமூகநீதி கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் சந்திக்கும் தளமாகத் தமிழ்நாடு மாறியுள்ளது. இங்கு பின்பற்றப்படும் சமூகநீதி கொள்கைகளை வட இந்தியாவில் இருக்கும் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்." என்றெல்லாம் பேசியிருந்தது தேசிய அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றது. 

 

இதையடுத்து, மு.க.ஸ்டாலினுக்கும், தேஜஸ்வி யாதவுக்குமான உறவை உடைப்பதற்கான வேலைகளில் ஒன்றிய அரசு மறைமுகமாக இறங்கியது. தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள், குறிப்பாக பீகாரைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டது. உத்தரபிரப் தேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த்குமார் உம்ராவ் என்பவர் பீகாரைச் சேர்ந்த 12 பேர் தமிழகத்தில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டார். இதையடுத்து பீகாருக்கும் தமிழ்நாட்டுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவியது. இதைச் சரிப்படுத்த தமிழ்நாடு காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கே நன்முறையில் பாதுகாப்புடன் இருப்பதாகவும் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரித்தது. 

 

தமிழ்நாட்டுக்கு பீகார் மாநில உயர் அதிகாரிகள் குழு வந்து வட மாநிலத் தொழிலாளர்களைப் பார்வையிட்டுச் சென்றனர். தமிழக முதல்வரும் பீகார் முதல்வர், துணை முதல்வரோடு தொடர்புகொண்டு வதந்திகள் குறித்து விவரித்தார். இங்கு வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்போடு இருப்பதை எடுத்துரைத்தார். இதையடுத்து, பா.ஜ.க.வினர் வதந்தி பரப்புவதாகக் குற்றம் சாட்டிய தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு அரசு நன்முறையில் செயல்படுவதாகப் பாராட்டினார். இதில் மேலும் பா.ஜ.க. தலைமை கடுப்பானது. இந்நிலையில், 2004 - 2009 காலகட்டத்தில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, பீகார் முதல்வராக லாலுவின் மனைவி ராப்ரி தேவியின் ஆட்சியில் இவரது ஆட்சியின்போது இந்திய ரயில்வே துறையில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள், தேஜஸ்வி யாதவின் வீட்டிலும் அவரது சகோதரிகளின் வீட்டிலுமாக 24 இடங்களில் ரெய்டில் ஈடுபட்டனர். அவரது கர்ப்பவதியான மனைவி மிகவும் சிக்கலான சூழலில் இருப்பதையும் பொருட்படுத்தாமல் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.  

 

இந்நிலையில், இந்த சோதனையில் ரூ.70 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்க கட்டிகள், 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் கசியவிட்டது. ஆனால் இதெல்லாம் பொய்யான செய்திகள் என்றும் தங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு பொய்ச் செய்தியைப் பரப்புவதாகவும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த ரெய்டுக்குப் பின்னால் தேஜஸ்வி யாதவ் மீதான மக்கள் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.