Skip to main content

பொய் பேசும் அரசியல்வாதிக்கான நோபல் பரிசு! எடப்பாடி பழனிசாமிக்கா? மு.க.ஸ்டாலினுக்கா?

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டிக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பிரச்சாரம் செய்தபோது “எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய பொய்” என்று குறிப்பிட்டு மக்களிடம் அளித்த விளக்கம் இது.   

 

palanisami

 

“அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதை கண்காணிப்பதற்காக ஒரு மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, அதன் பொறுப்பு அலுவலராக (Nodal Officer) தமிழக அரசால் மருத்துவர் பாலாஜி நியமிக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலில் ஏ.கே.போஸ் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக ஏ,பி படிவங்களில் மருத்துவர் பாலாஜி முன்னிலையில், ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன், நீதிமன்றத்தில் ஏ,பி படிவங்களில் ஜெயலலிதா கைரேகை பெறப்பட்டது குறித்து வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பில் ‘ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ நிர்வாகத்தின் மூலமாகவோ, அல்லது சிகிச்சை அளித்த மருத்துவர் மூலமாகவோ அதைப்  பெற்றிருக்கவேண்டும்’ என்ற கருத்தைத்தான் நீதிமன்ற தீர்ப்பில் நீதிபதி தெரிவித்திருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அதை இட்டுக்கட்டி, பொய் பரப்பி, கண், காது, மூக்கெல்லாம் வைத்து எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசி, மக்களிடம் குழப்பத்தை விளைவிப்பதற்காக, அயோக்கியத்தனமான ஒரு வார்த்தையை பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவருக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தீர்ப்பில் இப்படி சொல்லியிருக்கிறார்கள். அதை எப்படி திரித்துப் பேசுகிறார்? ஒரு அரசியல்வாதிக்கு பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்று சொன்னால், அதை மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்” என்றார்.  

 

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் திரித்து மு.க.ஸ்டாலின் பொய் பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மைதானா? என்ற கேள்விக்கு விடை தேடினோம்.

 

jayalalitha

 

டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கில் நீதியரசர் வேல்முருகன் வழங்கிய தீர்ப்பில் “ஆளுநரோ, மத்திய அமைச்சர்களோ, மாநில அமைச்சர்களோ பார்க்கமுடியாத ஜெயலலிதாவை அரசு மருத்துவர் பாலாஜி சென்று பார்த்து கைரேகை வாங்கினார் என்பது நிரூபிக்கப்படவில்லை. டாக்டர் பாலாஜி உள்ளே போகும்போது, ஏ மற்றும் பி படிவங்களில் ஏற்கனவே கைரேகை வைக்கப்பட்டிருந்ததாகவும், மற்ற படிவங்கள் என்ன ஆனது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறுகிறார். ஆகவே, ஜெயலலிதா சுய நினைவோடு, யோசிக்கும் திறனோடு, நல்ல மனநிலையில்தான் இருந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஏனென்றால், அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு டிரக்யாஸ்டமி எனப்படும் தொண்டைக்குழாய் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது தெளிவாகிறது. எனவே, ஏ மற்றும் பி படிவங்களில் ஜெயலலிதாவுடைய கைரேகை மிகவும் சந்தேகத்துக்குள்ளானதாக இருப்பதால், அந்தப் படிவத்தை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். வேட்புமனுவில் கையெழுத்துதான் பெறப்பட வேண்டும் என்று சட்டம் கூறும்போது, அதில் கைரேகை இடலாமென்று தேர்தல் ஆணையம் சட்டத்தைத் திருத்தி கடிதம் மூலமாக ஒப்புதல் அளித்தது சட்ட விரோதமானது. எனவே, மிகுந்த குறைபாடுடைய இந்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அதனால், ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது” என்று தீர்ப்பளித்துள்ளார். 
 

மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி  தெரிவித்த கருத்தையும், ஜெயலலிதா கைரேகை வழக்கில் சென்னை  உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், இக்கட்டுரை வாயிலாக அறிந்ததும் ‘பொய் பேசுவதற்கான நோபல் பரிசு பெறுவதற்குத் தகுதியானவர் எடப்பாடி பழனிசாமியா? மு.க.ஸ்டாலினா?’ என்பது தானாகத் தெரிந்துவிடும். 
 

-ராம்கி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.