Skip to main content

“நாங்கள் சொன்னது இன்றைக்கு உண்மையாகி வருகிறது” - திருமா பேட்டி

Published on 15/01/2023 | Edited on 16/01/2023

 

"What we said is coming true today" - thiruma Interview

 

ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்த போதே அவரை இங்கே நியமிக்க வேண்டாம் அரசியல் குழப்பங்களை உருவாக்குவார் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அப்போதே சுட்டிக் காட்டினோம் என விசிக தலைவர் திருமா தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''தமிழகம் வேறு தமிழ்நாடு வேறு என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதே ஒரு குதர்க்கவாதம். இரண்டும் ஒன்றுதான். ஆனாலும் இரண்டுக்கும் இடையிலேயே இடைவெளியை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒரு உரையாடலை ஆளுநர் தொடங்கி வைத்திருக்கிறார். அது வெறும் சொல் விளையாட்டு அல்ல, கருத்தியல் தொடர்பான முரண் என்பதை நாம் உணர்கிறோம். ஆகவே தான் அவருடைய போக்குகள் தமிழ் இனத்திற்கு விரோதமாக இருக்கிறது. குறிப்பாக திராவிட கருத்தியலுக்கு எதிராக இருக்கிறது. சமூக நீதி அரசியலுக்கு எதிராக இருக்கிறது என்று அவ்வப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டி வந்திருக்கிறது.

 

அவரை ஆளுநராக நியமித்த போதே அவரை இங்கே நியமிக்க வேண்டாம் அரசியல் குழப்பங்களை உருவாக்குவார்; பதற்றத்தை ஏற்படுத்துவார்; நாகலாந்தில் அதற்கான சான்றுகள் இருக்கிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அப்போதே சுட்டிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தோம். இன்றைக்கு அது உண்மையாகி வருகிறது. ஆளுநர் உண்மையாக்கி கொண்டு இருக்கிறார். சட்டப்பேரவையில் அவர் நடந்து கொண்ட போக்கு என்பது தனிப்பட்ட முறையில் அவருடைய நடவடிக்கையாக நாம் பார்க்கவில்லை. தனிநபர் நடத்தையோடு தொடர்புடையது என்று விடுதலைச் சிறுத்தை கட்சி பார்க்கவில்லை. அவர் உள்வாங்கி இருக்கக்கூடிய அரசோடு தொடர்புடையது. அவர் உள்வாங்கி இருக்கிற கருத்துகளோடு தொடர்புடையது. அவர் இங்கு நிலைநாட்ட விரும்புகிற சனாதன அரசியலோடு தொடர்புடையது. ஆகவேதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு 'ஆளுநரே திரும்ப போ...' என்ற முழக்கத்தை முன்வைத்து மாபெரும் முற்றுகை அறப்போராட்டத்தை நடத்தினோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.