Skip to main content

திமுகவின் வெற்றி இவர்களால் தான்... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்... அமித்ஷாவின் அதிரடி திட்டம்!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து மத்திய உளவுத் துறையான ஐ.பி.யிடம் ஒரு ரிப்போர்ட் கேட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர்கள் தந்த ரிப்போர்ட்டில் தி.மு.க.வின் முதன்மைத் தலைவர்களான தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திருவண்ணாமலை மா.செ. எ.வ.வேலு, விழுப்புரம் மா.செ. பொன்முடி, எம்.பி. ஆ.ராசா போன்றவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தந்து, "இவர்களை தேர்தல் களத்தில் முடக்கினால் தேர்தலில் பாதி வெற்றி' என்றுள்ளது. அதனை பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் தந்து, தேர்தல் குறித்து ஆலோசித்துள்ளனர்.

 

dmk



"ஆளும்கட்சியாக இருந்தாலும் ஜாக்கி இல்லாத குதிரையாக உள்ளது அ.தி.மு.க. தேர்தல் நேரத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். உத்தரவையெல்லாம் அவர்கள் கட்சியினர் மதிக்கமாட்டார்கள். இவர்களை தி.மு.க. தலைவர்கள் ஈஸியாக மடக்கி விடுவார்கள். அதனால் தி.மு.க. பிரமுகர்களை பார்த்து பயப்படாத, பணத்தை தாராளமாக இறைக்கக்கூடிய ஆட்களை நாம் களத்தில் இறக்கினால், தி.மு.க. தலைவர்களை அவர்கள் மாவட்டத்தில் முடக்கிவிடலாம், அப்படி செய்தால் பாதி வெற்றி என்றுள்ளார்கள்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகனை எதிர்த்து, பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க. சார்பாக தேர்தல் வேலை செய்வதற்காக, வேலூர் எம்.பி. தேர்தலில் துரைமுருகன் மகனிடம் தோற்றுப்போன ஏ.சி. சண்முகத்தை கேட்டுள்ளது பா.ஜ.க. "நான் செலவு செய்கிறேன், எனக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் வேண்டும்' என அவர் கேட்டுள்ளாராம். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவை எதிர்க்க, சினிமா தயாரிப்பாளரும், ஃபைனான்ஸ் அதிபருமான தணிகைவேலை களமிறக்கலாமா என ஆலோசித்துள்ளது'' என்றார் உளவுத் துறையில் உள்ள முக்கிய அதிகாரி.

யார் இந்த தணிகைவேல்?

திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் நகராட்சி சேர்மனாக, எம்.பி.யாக, எம்.எல். ஏ.வாக இருந்தவர் முருகையன். அவரது நெருங்கிய உறவினர் தணிகைவேல். மத்திய அமைச்ச ராக செஞ்சி.ராமச்சந்திரன் இருந்தபோது, அவருடன் இருந்ததால் டெல்லி லாபியும் அத்துப்படி. இவர் மீது வைகோவுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கினார். பின்னர், தே.மு.தி.க.வில் இணைந்து பதவியைப் பெற கோடிகளை வாரியிறைத்தார். சில சிக்கல்களில் சிக்கிய தணிகைவேல், தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க. மா.செ. எ.வ.வேலுவை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். லோக்கல் பாலிடிக்ஸால் விலகிக்கொண்டார். தற்போது பா.ஜ.க.வின் மேல்மட்ட தலைவர்கள் சிலரின் நட்பு பட்டியலுக்குள் சென்றுள்ளார். கடந்த 20 வருடங்களாக பணத்தை வாரி வழங்கி தனக்கென நகரத்தில் ஒரு இளைஞர் வட்டத்தினை உருவாக்கி வைத்துள்ளார்'' என்றார்கள் திருவண்ணாமலை அரசியலை அறிந்தவர்கள்.

 

bjp



தணிகைவேல் ஆதரவாளர்கள் ஒருவர் நம்மிடம், "கடந்த வாரத்தில் திருவண்ணாமலை வந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவை எதிர்க்க எந்தக் கட்சியிலும் பிரமுகர்கள் இல்லையாம். அதனால் என்னை கட்சியில் இணைத்து "அவருக்கு எதிராக அரசியல் செய்யுங்கள்' என பா.ஜ.க. மேல்மட்டத்தில் கேட்கிறார்கள். நானும் பா.ஜ.க.வில் சேர முடிவு செய்துள்ளேன், 5 ஆயிரம் பேரோடு அங்கு போனால்தான் எனக்கு மரியாதை. நீங்கள் என்னுடன் வரவேண்டும் எனக் கேட்டார்'' என்றார்கள்.


இதுகுறித்து தணிகைவேல் கருத்தறிய அவரை செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது, "பா.ஜ.க.வில் நான் சேரப்போவது உண்மைதான். நிதியமைச்சர் நிர்மலா மேடம், முன்னிலையில் இணைகிறேன். யாரையும் எதிர்க்க வரவில்லை, தலைமை என்ன சொல்கிறதோ அதைச் செய்யப்போகிறேன்'' என்றார்.


இதுபற்றி டெல்லியுடன் நேரடித் தொடர்புடைய பா.ஜ.க. பிரமுகர் ஒருவருடன் நாம் பேசிய போது, "இன்னும் கட்சியில் சேராத தணிகைவேலை திரு வண்ணாமலை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கிறார்களா என தெரியாது' என்றவர், "திருவண்ணாமலையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரின் மகள் ஐதராபாத்தில் செட்டிலாகியுள்ளார். அவர் சமீபத்தில் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவை சந்தித்து பா.ஜ.க.வில் இணைந்தார். அந்தப் பெண்மணி மூலமாக முரளிதரராவ் வட்டத்துடன் நெருங்கி, அங்கிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வட்டத்தில் இணைந்து டெல்லியில் தணிகைவேல் லாபி செய்கிறார் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது'' என்றார். கூடுதலாக, "சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் 11 தொழிலதிபர்களை செலவு செய்யச்சொல்லி உத்தரவிட்டுள்ளது எங்கள் கட்சி தலைமை. அதில் 4 கல்வி நிறுவனங்களின் அதிபர்கள் உட்பட 11 பேர் அடக்கம். அதில் சிலர் நேரடி அரசியலிலும் இறங்குவர், மற்றவர்கள் பண உதவி மட்டும் செய்யவுள்ளார்கள்'' என்றார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.