Skip to main content

வேலூர் தேர்தல் புறக்கணிப்பு ஏன்? டிடிவி தினகரன் விளக்கம்

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

 

ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்தார்.
 

இந்நிலையில் டி.டி.வி. தினகரன் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 

பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சந்தித்த பின்னடைவுக்கான காரணங்களை உணர்ந்து எதிர்காலத்தில் அவற்றையும் எதிர்கொண்டு வெற்றிகளை குவிக்கும் தாகத்தோடு காத்திருக்கும் உங்களின் எழுச்சிக்கு முதலில் தலை வணங்குகிறேன்.
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் பெற்ற வெற்றியால் எரிச்சலுற்ற நம் எதிரிகள் நம்மை வீழ்த்துவதற்கான சதி வேலைகளை இருமடங்காகச் செய்ய ஆரம்பித்த நேரத்தில்தான் பாராளுமன்றத் தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்தது. நீதிமன்ற அனுமதியோடு தனி இயக்கம் கண்டு நாம் இயங்கி வந்தபோது நமக்கென ஒரு தனி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததை எதிர்த்து மிக நீண்ட சடடப்போராட்டத்தை நாம் நடத்தினோம்.


  ttv dhinakaran


வேட்பு மனு தாக்கலுக்கு சில மணி நேரம் முன்பு வரை நாம் யார்? அரசியல் கட்சியின் வேட்பாளரா? சுயேட்சை வேட்பாளரா? என்பதைக்கூட உறுதிபடச் சொல்ல முடியாத ஒரு சோதனையை வேறு எந்த இயக்கமும் சந்தித்திருக்காது.
 

கடைசியில் சுயேட்சைகளாக தான் போட்டியிட வேண்டும் என்று சொல்லப்பட்டு, அதன்பிறகு சில நாள் காத்திருப்புக்குப் பிறகு பரிசுப் பெட்டகம் சின்னத்தை பெற்றோம். அந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததிலும், நாம் சுயேட்சைகள் என்பதால் மிகப் பெரும்பாலான தொகுதிகளில் நமது சின்னம் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குப் பதிவு எந்திரங்களில் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
 

இத்தகைய தடைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணியை ஆரம்பித்தோம். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஒரு பின்னடைவை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் சேர்ந்து நம்மில் சிலரை அவர்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

ஆனால் நமது இயக்கத்துக்கு நிஜமான மக்கள் ஆதரவு இருக்கிறது. நமது இயக்கத்தை தேர்தல்ஆணையத்தில் பதிவு செய்யும் பணி ஆகஸ்டு மாத இறுதி வாக்கில் நிறைவு பெறக்கூடும். அதுவரை நாம் சுயேட்சை என்ற அடையாளத்தோடு தான் தேர்தல் களத்தில் அறியப்படுவோம்.
 

அந்த அடிப்படையில் இந்த வேலூர் தொகுதி தேர்தலுக்காக ஒரு சின்னத்தை பெற்று, தொடர்ந்து வர உள்ள நாங்குநேரி, விக்கரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு தனித்தனி சின்னங்களை பெற்று நாம் தேர்தலை சந்திப்பதும், நமது இயக்கத்தை பதிவு செய்யும் பணி நிறைவடைந்து ஒரு நிரந்தர சின்னத்தை பெற்று அதன்பிறகு வரும் தேர்தல்களை சந்திப்பதும் என பல சின்னங்களில் போட்டியிடுவது மக்களிடம் மட்டு மல்ல - நமது தொண்டர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

 

இதை மனதில் கொண்டு நமது இயக்கத்தின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வேலூர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம்.


 

இந்த முடிவு பயத்தின் காரணமாக எடுக்கப்பட்டது. தேர்தல் களத்தைக் கண்டு அ.ம.மு.க. பயப்படுகிறது... என்றெல்லாம் நமது எதிரிகள் திட்டமிட்டு வி‌ஷமப் பிரச்சாரம் செய்யக்கூடும் அவற்றையெல்லாம் புறந்தள்ளுங்கள்.
 

நமது இயக்கத்துக்கான நிரந்தரமான புதிய அடையாளத்தோடு மக்களை சந்திப்போம். வெற்றிகளை ஈட்டுவோம். தமிழகத்தை இந்த துரோகக்கூட்டத்திடம் இருந்து மீட்போம். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.