Skip to main content

"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...

Published on 15/01/2021 | Edited on 16/01/2021

 

vanathi srinivasan shares memories about gnanadesigan

 

த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். வழக்கறிஞரான ஞானதேசிகன், மூப்பனாருடன் நெருக்கமாக இருந்ததால், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது அவருடன் சேர்ந்தே ஞானதேசிகன் செயல்பட்டார்.

 

த.மா.கா.வில் முக்கிய பதவிகளை வகித்துவந்தார். பின்னாளில் ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். இந்நிலையில், மறைந்த ஞானதேசிகன் உடனான சில நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன். அவரது பதிவு பின்வருமாறு...

 

vanathi srinivasan about gnanadesigan

 

"ஞானதேசிகன் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாகச் செயலாற்றியவர். தமிழகத்தில் வளமாக, அழுத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த தேசியத்தினுடைய ஒரு குரல் இன்று ஓய்ந்திருக்கிறது என நான் கருதுகிறேன். வழக்கறிஞர் தொழிலில் அவரது ஜூனியராக கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் நான் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வழக்கறிஞர் தொழிலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய எனக்கு ஆதரவாக இருந்த ஒருவரை நான் இழந்திருப்பதாக உணர்கிறேன். எந்த நேரத்திலும் சமரசமில்லாத ஒரு தேசிய குரலுக்குச் சொந்தக்காரர் அவர். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தும் கூட அவரது அலுவலகத்தில் ஜூனியர் வழக்கறிஞராக எனக்கு வாய்ப்பளித்தார். எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய ஒரு சக்தியாக அவர் இருந்தார். 

 

தமிழகத்தின் ஒரு அப்பழுக்கற்ற தேசிய நீரோட்டத்திலிருந்த ஒரு ஆளுமை மறைந்திருப்பது என்பது எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன். இது எனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பாக நான் கருதுகிறேன். என்னுடைய அப்பாவிடம் பேசி எனது திருமணத்தை நடத்தி வைப்பதில் மிக முக்கிய பங்காற்றியவர். ஆரம்ப காலகட்டத்தில் எனது வக்கீல் தொழிலில் சிறந்த பயிற்சியைக் கொடுத்ததோடு, இந்த தொழிலில் மக்களுக்கு உதவ எந்த அளவு தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதையும் எனக்குப் புரிய வைத்தவர் அவர். 

 

WhatsApp Image 2021-01-16.jpg

 

திருமணமாகி நான் டெல்லியில் வழக்கறிஞர் பணியிலிருந்தபோது, நான் மீண்டும் தமிழகம் திரும்ப முக்கியமான காரணமாக அவர் இருந்தார். தமிழகத்திலேயே நல்ல வாய்ப்புகள் உண்டு நீங்கள் ஏன் இங்கு திரும்பி வரக்கூடாது எனவும், என் அலுவலகத்திலேயே நீங்கள் பணியாற்றலாம் எனக்கூறி அவர் விடுத்த அழைப்பின் காரணமாகவுமே திரும்பவும் நாங்கள் தமிழகம் வந்தோம். அனைவரிடமும் நட்பு பாராட்டக் கூடியவர். கட்சி பேதமின்றி ஒரு சிறந்த மூத்த வழக்கறிஞருக்கு உதாரணமாக இருந்தவர். எனக்கு முதல் சம்பளத்தைக் கொடுத்த மூத்த வழக்கறிஞர் அவர். நான் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபாட்டுடன் இருந்து அதில் முன்னேறி வருவதற்கு மிக முக்கிய காரணம் அவர்".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.

Next Story

மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 Postponement of the program of alternative parties joining the BJP

பா.ஜ.க.வில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணையும் நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (26.02.2024) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி இன்று மாலை நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இருப்பினும் நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் பா.ஜ.க.வினர் யாரும் வரவில்லை. அதன் பின்னர் மாலை 06.40 மணியளவில் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் வந்தனர்.

அதன் பின்னர் கே.பி. ராமலிங்கம் பேசுகையில், “இன்றைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் பா.ஜ.க.வில் இனைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் கட்சியில் இணைபவர்கள் மோடியை சந்திக்க வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்பட்டதாலும், பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.