Skip to main content

கஜா புயலில் 89 தமிழர்கள் உயிரிழந்தார்களே அனுதாப வார்த்தைகளாவது சொன்னீர்களா - வைகோ

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்  ராமலிங்கத்தை ஆதரித்து ம.தி.மு.க.வின் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. 

 

vaiko

 

கூட்டத்தில் கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட திமுக, மதிமுக மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அங்கு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து வைகோ பேசினார்.
 

"நாட்டிற்கு பேராபத்து  வந்திருக்கும் சூழலில் பாராளுமன்ற தேர்தலை நாம் சந்தித்துவருகிறோம். ஆபத்து வெளியிடங்களில் இருந்து வரவில்லை, வெளிநாடுகளில் இருந்து வரவில்லை, இந்துத்துவா அமைப்புகளின் சார்பில் அவர்களது கோரகுரலாக நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் வந்திருக்கிறது. 
 

 பிரதமர் மோடி இந்துத்துவா சக்திகளை விமர்சனம் செய்வதை அப்படியே திரித்து மாற்றி இந்துக்களை எதிர்க்கிறார்கள் என்று  மாற்றி சொல்லி தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்.
 

 இந்துத்துவா வன்முறையில் ஈடுபட்டதுண்டா என்று கேட்கிறீர்களே மறந்துவிட்டீர்களா கோட்சேவால் காந்தியைக் சுட்டுக் கொண்றீர்களே மறந்துவிட முடியுமா?  இரண்டு மாதங்களுக்கு முன்பு அலிகரில் காந்தியின் பொம்மையில்  துப்பாக்கியால் சுட்டு ரத்தம் கசிவது போல்  காட்சியமைத்தீர்களே மறந்துவிடமுடியுமா? அந்த கொலைகார கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலைவைப்போம் என்று  இந்துத்துவா சக்திகள் சொல்வது நெஞ்சை பதற வைக்கிறது. 

 

இதற்கெல்லாம் சாதாரன கண்டனம்கூட தெரிவிக்காத  பிரதமர் மோடி, பிரதமர் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் தகுதியை அடியோடு இழந்துவிட்டார்.
 

மேகதாதுவில் அணை கட்டினால் மேட்டூர் முதல் கல்லணை வரை எங்கும் தண்ணீர் வராது, இதனால் தமிழகமே பட்டினி பிரதேசமாக மாறிவிடும். 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்து பாலைவனமாக மாறும், பூமிக்கு அடியில் இருக்கும் இயற்கை எரிவாயுக்களை எடுத்து பல்லாயிரக்கணக்கான கோடிகளை அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது.
 

மோடி அவர்களே, கஜா புயலில் 89 தமிழர்கள் உயிரிழந்தார்கள் அனுதாப வார்த்தைகள் சொன்னீர்களா,  உலக நாடுகளுக்கெல்லாம் சென்று வந்த பிரதமர் ஒப்புக்காவது வந்து பார்த்தீர்களா, விவசாய கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்ய மாட்டீர்கள். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ 5 லட்சம் கோடி வரிச்சலுகை, ரூ 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி  விஜய் மல்லையா ரூ 9 ஆயிரம் கோடி, நீரவ் மோடி ரூ 13 ஆயிரத்து 500 கோடி ஊழல் செய்து தப்பி செல்ல வழி வகுத்திருக்கிறீர்களே.
 

விக்ரம் கோத்தாரி  ரூ 3850 கோடி மோசடி செய்து ஓடிப்போனார், ஆந்திராவில் நிக்கில் சுரேஷா மூன்று வங்கிகளில் ரூ 2500 கோடி மோசடி செய்து வெளியேறினார். இதற்க்கு எல்லாம் காரணம் கார்ப்ரேட் முதலாளிகளின் ஆதரவாளரான பிரதமர் மோடிதானே காரணம்.

 


நரேந்திர மோடி, அமித்ஷா பெயரை சொன்னாலே தமிழக  அரசு நடுங்கி ஒடுங்கி விடுகிறது. இதற்கு காரணம் பருப்பு,  ஆம்னி பஸ் ஊழல், கல்வித் துறை, பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறைகளில் ஊழல், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல், அனைத்து துறைகளிலும் ஊழல் செய்த அமைச்சர்கள் வீடுகளில் வருமானவரித்துறை மூலம் ரெய்டு நடைபெற்றது, நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் இதற்கு என்ன பதில் என்று இதுவரை கூற முடியவில்லை.
 

தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள் தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக வந்த போர்டு நிறுவனத்திடம் அதிமுக அரசு கமிஷன் அதிகம் கேட்டதால் குஜராத்துக்கும், வேறுமாநிலத்திற்கும் சென்றுவிட்டனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் சித்தூருக்கு சென்றுவிட்டது.

 

கியா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ  7 ஆயிரத்து 950 கோடி முதலீட்டில் தொடங்க வந்த நிறுவனம் இவர்கள் கேட்ட கமிஷன் தொகையால்  அவர்கள் போட்ட முதலீட்டுத் தொகையை விட பெருந்தொகை என கூறி அனந்தபூர் சென்றுவிட்டது.  
 


தமிழகத்தில் நடைபெற்ற  ஓசூர் தர்மபுரி ஆகிய பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தி உயிர் இழப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சியில் ஆளும் கட்சி பிரமுகரின் பிள்ளைகள் நடத்திய பாலியல் வன்முறையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மூடி மறைத்ததால் 200 பெண்களின் வாழ்க்கை சிதைக்கப்பட்டுள்ளது.  

 

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில்  அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளார்கள், இது தமிழக அரசு  காவல்துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கூலிப்படையினர் போல்  திட்டமிட்ட படுகொலை.  

 

முப்படை ராணுவ வீரர்கள் எங்கள் காவல் தெய்வங்கள் எந்தக் கட்சிக்கும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆணி செய்வதற்கு கூட அனுபவம் இல்லாத அம்பானி நிறுவனம் ரபேலில் அனுமதி பெற்றது.


தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை ரிமோட் கண்ட்ரோல் மத்திய அரசு  இயக்கப்பட்டு வருகிறது என ஓய்வு பெற்ற நீதிபதிகள் குற்றசாட்டிவருகின்றனர். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு வருகிறோம். மத்திய, மாநில ஆட்சிகளை தூக்கி எறிய வேண்டும்.
 

காங்கிரஸ் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து செய்து, மாநில கல்வி பட்டய பட்டியலுக்கு கொண்டு செல்வோம் என பல்வேறு மக்கள் நலம் சார்ந்த  திட்டங்களை இடம் பெற செய்ததை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று மழை அடித்து ஓய்ந்தது போல் பேசிமுடித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.