Skip to main content

“அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள்” - டிடிவி தினகரன்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

ttv dinakaran talks about edappadi palaniswami at trichy marriage function

 

திருச்சி மாவட்ட அமமுக தகவல் தொழில்நுட்ப மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.குமார் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று திருச்சிக்கு வந்த அமமுகவின் தலைவர் டி.டி.வி. தினகரன் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

 

அப்போது அவர் பேசுகையில், "பதவி வெறியாலும், ஒரு சிலருடைய சுயநலத்தாலும், ஜெயலலிதாவின் இயக்கம் பலவீனமாகிக் கொண்டு இருக்கிறது. உண்மையான தொண்டர்கள் விரைவில் அதை மீட்டெடுப்போம். 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களில் பலர் ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற படிப்புகளுக்குச் சென்றுவிட்டதால் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அத்துறையின் அமைச்சர் உரிய தகவல்களைச் சேமித்து புள்ளிவிவரத்துடன் கூற வேண்டும். பள்ளியின் இருந்து இடைநிற்றல்கள் அதிகமாக உள்ளது என்பதற்கான உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

 

அதிமுகவில் 1 லட்சம் பழனிசாமிகள் உள்ளனர் என்ற கருத்து கூறப்படுகிறது. அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். 2013 மன்மோகன் சிங் ஆட்சியில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஒருவர் பதவியில் இருக்கும்போது, தேர்தல் ஆணையத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட நபர் மேல்முறையீடு செய்து இறுதித்தீர்ப்பு வரும் வரை அவர் அதே பதவியில் நீடிக்கலாம் என்பதற்கு அன்று ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். இன்று அந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்திருந்தால் ராகுலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அன்று நிராகரித்தவர் இன்று அனுபவிக்கிறார்.

 

அமமுகவில் உள்ளவர்கள் கட்சி மாறுகிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு சிலர் தன்னுடைய சொந்தப் பிரச்சனைகளுக்காகவோ, பதவிக்காகவோ செல்கிறார்கள். ஆனால் அந்த இடத்திற்கு நல்ல தகுதியானவர்கள் உடனடியாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.