Skip to main content

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஆபாச பேச்சு!!! வழக்கு பதியுமா காவல்துறை?

Published on 23/11/2020 | Edited on 23/11/2020
admk

 

 

திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் குறிப்பிட்ட சமூக பெண்களை ஆபாசமாக பேசியதை கண்டித்து வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தனி தனியே கண்டன போராட்டம் நடத்தினார்கள்.

 

திருச்சி மாநகர் மாவட்டத்தில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆவின் பெருந்தலைவர் கார்த்திகேயன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, பூபதி, நாகநாதர் பாண்டி மலை கோட்டை அய்யப்பன், டாக்டர் சுப்பையா, தமிழரசிசுப்பையா, அருள் ஜோதி, வக்கில் எட்வின் ஜெயகுமார், வக்கில் தாமரை செல்வன், கிருஷ்ணவேணி, ஜாக்குலின் கூட்டுறவு அமைப்பு தலைவர்கள் பத்மநாபன், ஏர்போர்ட் விஜி, கேபிள் முஸ்தபா, பாபு, இலியாஸ், சையது அன்வர் அப்பா குட்டி கட்பிஸ் ரமேஷ் உட்பட பலர் கலந்து கெண்டனர். தியாகராஜனை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டன. 

 

admk


இதில் தலைமை பேச்சாளர் நெத்தியடி நாகையன் கண்டன உரை ஆற்றினார். ஆரம்பத்தில் தியாகராஜனை கண்டித்து பேசியவர், பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் ஆபாசமாக பேசியதும் சர்ச்சைக்குள்ளானது. பெண்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆபாசமாக பேசியதும், இதில் சோழிய வேளாளர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

காடுவெட்டி தியாகராஜன், தான் பெண்களை இழிவுபடுத்தி பேசவில்லை. பேசி இருந்தால் மன்னிக்கவும் என பொது மன்னிப்பு கேட்ட நிலையில் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் மாவட்ட செயலாளராக உள்ள மாநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையனின் பேச்சை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட துணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட மகளிர் அணி செயலாளர் டாக்டர். தமிழரசி  சுப்பையா உட்பட மகளிர் அணியினர் முகம் சுழித்து காதை பொத்தியடியே ஆர்ப்பாட்டத்தை விட்டு கலைந்தனர்.

 

ddd

 

மேலும் இளம் பெண்கள் பாசறை மூலம் வந்த இளம் பெண்கள் வெட்கப்பட்டு சீ... சீ... தூ... தூ... என கூறியபடியே கலந்து சென்றனர். தொடர்ந்து நெத்தியடி நாகையன் பேசிய பேச்சை உளவு துறை போலிசார் பதிவு செய்தும், 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தடை உத்தரவு மீறிய அ.திமுக. நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

 

தொடர்ந்து ஆபாசமாக பேசியதால் ஆண்களே சிலர் வெளியேற பெண்களும் வெளியேற வாகனத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள் நாகையனை தடுக்காமல் நின்றது அ.தி.மு.க பெண்களிடையே அதிருப்தி உருவாக்கியது.


ஆபாசமாக பேசிய நெத்தியடி நாகையன் மீதும் வழக்கு தொடர ஆலோசிக்கப்படும் என்றனர் காவல் துறையினர். திமுகவினரை ஆபாசமாக பேசிய அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன் மீது தி.மு.க.வினர் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்க உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட அந்தப் பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.